சித்ராவிற்கு அஞ்சலி செலுத்த வந்த சுரேஷ் சக்ரவர்த்தி.. ''உன்னை கோழை-னு சொல்லும் போது..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவின் மறைவு குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையானவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து இவர் பிரபலமானார். இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து பல்வேறு நட்சத்திரங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சித்ராவின் பூத உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமான சுரேஷ் சக்ரவர்த்தி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீ எவ்வளவு கஷ்டத்தை கடந்து வந்திருப்பாய் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மக்கள் உன்னை கோழை என்று சொல்லும் போது எனக்கு மிகவும் வலிக்கிறது. ஆனால் அது எவ்வளவு வலி மிகுந்தது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. Rest in Peace'' என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

 

சித்ராவிற்கு அஞ்சலி செலுத்த வந்த சுரேஷ் சக்ரவர்த்தி.. ''உன்னை கோழை-னு சொல்லும் போது..'' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சித்ராவின் மறைவு சுரேஷ் சக்ரவர்த்தி உருக்கம் | biggboss suresh chakravarthy emotional note on actress chithra demise

People looking for online information on Chithra, Suresh Chakravarthy will find this news story useful.