"எனக்கு மட்டும்தான் திறக்குதா அந்த கதவு!".. பாதாள சிறைக்கு சென்ற 2 பிக்பாஸ் போட்டியாளர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்தது பிக்பாஸ் போர்டிங் ஸ்கூல் எனப்படும் கனா காணும் காலங்கள் டாஸ்க். இந்த பள்ளிக்கு சிபி வார்டனாகவும், ராஜூ, அபிஷேக், அமீர் உள்ளிட்டோர் ஆசிரியர்களாகவும் இருந்தனர். மற்றவர்கள் மாணவர்களாக இருந்தனர்.

Advertising
>
Advertising

இதனை அடுத்து, இதில் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார் என்பது குறித்து பிக்பாஸ் அனைவரையுமே கருத்து கேட்டிருந்தார்.

இதில் ஐக்கி, வருண் உள்ளிட்டோர், நடன மாஸ்டர் அமீரை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என குறிப்பிட்டனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணம்,  அவர் இப்போதுதான் வந்திருக்கிறார் என்பதால் அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகலாம். அவரே அந்த குழப்பத்திலும் தயக்கத்திலும் இருப்பதுவும், போட்டியாளர்களிடையே அவர் இன்னும் பழகாததும் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டனர்.

இதேபோல், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, பாவனி, அபிஷேக் உள்ளிட்டோர் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என நிரூப்பை குறிப்பிட்டனர். ஏகோபித்தமாக அனைவருமே இதற்கு சொன்ன காரணம், நிரூப் மிகவும் நல்ல ஸ்டூடண்டாக இருக்க முயற்சித்ததுதான். உண்மையில் சேட்டைகளை செய்யும் ஒரு சுட்டி மாணவராக இருந்திருக்க வேண்டும் என அனைவரும் குறிப்பிட்டனர்.

குறிப்பாக பிரியங்கா சொல்லும்போது, “ஸ்டூடன்ட்ஸ் என்றால் சுட்டி, நாட்டி என்றெல்லாம் பெயர் வாங்க வேண்டும். கலகலவென இருக்க வேண்டும். ஆனால் நிரூப் பெஸ்ட் ஸ்டூடன்ட்டாகவும், டீச்சர்ஸ் கிட்ட நல்ல பெயர் வாங்கணும்ங்குறதுக்காக பெர்ஃபார்ம் பண்ணார்.!” என குறிப்பிட்டார்.

இதனை அடுத்து அனைவரின் அபிப்ராயத்துக்கு பிறகு, பிக்பாஸ் அமீர் மற்றும் நிரூப் பாதாள சிறைக்கு அனுப்பிவிட்டார். இந்த அறிவிப்பு வந்தவுடனேயே, “அய்யயோ.. எனக்கு மட்டும்தான் அந்த ஜெயில் கேட் திறக்குதா?” என சிரித்தபடி கூறினார்.

பாதாள சிறைக்கு நிரூப் செல்வது இது 2வது முறை என்பதும், அமீருக்கு இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss sent two contestent to dungeon biggbosstamil5

People looking for online information on Abhishek, Abishek, Akshara, Ameer jail, Amir jail, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Ciby, Niroop, Niroop jail, Vijay Television, Vijay tv will find this news story useful.