இதுவரைக்கும் 10 முறை நாமினேஷன்! ஆனாலும் BIGGBOSS-ல் நின்று ஆடும் பாவனி! குதூகலத்தில் #PAVANIARMY!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television, BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தம்முடைய இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்தனர். பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் என்று வெளியேற்றப்பட்டனர். கடைசியாக வருண் மற்றும் அக்‌ஷரா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.

Advertising
>
Advertising

டிக்கெட் டூ ஃபினாலே

இவர்களைத் தொடர்ந்து சஞ்சீவ் அண்மையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பே அமீர் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக வந்தார்.  இதனிடடையே நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்றதையடுத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் நாமினேஷனை கடந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லக்கூடிய போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார்.

பாவனி ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து கவனிக்கப்பட்ட போட்டியாளர்களுள் ஒருவர் பாவனி. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு போட்டியாளருக்கு ஒரு ஆர்மி உருவாகும். முதல் சீசனில் ஓவியா தொடங்கி, கடைசி சீசனில் ஆரி வரை பல போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவானது. அப்படிதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் பாவனிக்கு ஆர்மி உருவானது.

Also Read: 3 லட்ச ரூபாய்... BiggBoss-க்குள் வந்த சரத்குமார் கொடுத்த சர்ப்ரைஸ்! பரபரப்பில் ஹவுஸ்மேட்ஸ்! தெறி ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் பாவனி கடந்து வந்த பாதை 

முன்னதாக கதை சொல்லும் டாஸ்கில், பாவனி தன் திருமண வாழ்க்கை, கணவரின் மரணம், தன் தனிமை உள்ளிட்டவை குறித்து பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் பாவனிக்கு ஆறுதலை கூறி வந்தனர். அதன் பின் மெல்ல மெல்ல பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பழகிய பாவனி, ஓரளவுக்கு அந்த விஷயங்களில் இருந்து வெளியேற உதவியாக இருந்தது. எனினும் பாவனியுடனான அபினய் மற்றும் அமீரின் உறவுகள், உறவுச்சிக்கல்கள் குறித்த பேச்சுகள் அடுத்த கொஞ்ச நாள் பேசுபொருளாக இருந்தன. தற்போது அமீரும் பாவனியிடம் இருந்து தள்ளி கேமை ஃபோகஸ் செய்வதாக கூற, பாவனியும் தன் கேமில் கவனம் செலுத்தி வருகிறார். 

சுமார் 10 முறை நாமினேஷன் - அசராத பாவனி

இந்நிலையில் பாவனி ஆர்மி தற்போது குஷியாகி இருக்கின்றனர். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதுவரை பல முறை நாமினேஷன் ப்ராசஸ் நடந்திருக்கின்றன. ஒருபுறம் சக போட்டியாளர்களின் நாமினேஷன், இன்னொருபுறம் வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் அளிக்கக்கூடிய வாக்குகள் உள்ளிட்டவை பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் இருப்பை தீர்மானிக்கின்றன.

மன வலிமை தான் காரணம்

அந்த வகையில் சுமார் பத்து முறை பாவனி இதுவரை நாமினேட் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதில் கடைசியாக பிக்பாஸ் அரங்கத்தில் இருக்கும் பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களை காப்பாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது ஒரு போட்டியாள பார்வையாளர் பாவனியை காப்பாற்றினார்.

அப்போது பாவனியின் மன வலிமை தான் காரணம் என அந்த பார்வையாளர் குறிப்பிடதுடன், பாவனியின் ஆட்டத்தை பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.  இப்படி சுமார் 10 முறை தொடக்கத்தில் இருந்தே பாவனி நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் பாவனி நீடித்து வருகிறார் என்கிற குதூகலத்தில் #PavaniArmy அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Also Read: “இது தப்பா?”.. “அது உங்க அந்தரங்கம்.. யாருக்கும் Explain பண்ணாதீங்க!”.. ஸ்ருதி நகுல் பளார்!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Pavani Saved 10 times nomination pavani army

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Pavani, Pavani army, Pavani Nomnation, Pavani serial will find this news story useful.