விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆன பிக்பாஸ் அர்ச்சனா.. எந்த நிகழ்ச்சி தெரியுமா...?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, சோம், ரியோ மற்றும் கேபி ஒரு குழுவாக செயல்படுகின்றனர் என்று சில போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பே குற்றச்சாட்டு வைத்தனர். எது எப்படி இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் அர்ச்சனா புலியாக மாறிவிடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அதே போல் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் பலருக்கும் தேவையான சமயங்களில் அன்பு காட்டினார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் அவர் காட்டிய அன்பு ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றும் சில போட்டியாளர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது இப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது.  இதற்கு முன்பதாக அர்ச்சனா ஜீ தமிழில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வந்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விஜய் டிவியில் காதலர் தினத்தன்று ஒளிபரப்பாக இருக்கும் 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த செய்தியை ஆல்யா மானசாவின் கணவரும் நடிகருமான சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே இனி விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : Archana

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Archana turns VJ for vijay tv விஜய் டிவியில் vj ஆன பிக்பாஸ் அர்ச்சனா

People looking for online information on Archana will find this news story useful.