"நான் வீக் ஆகிட்டே போறேன்.. என்னால முடியல".. திடீர்னு கதறியழுத ஜனனி.. அமுதவாணனின் அட்வைஸ்..! BIGGBOSS6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான மிரட்டலான First Look Poster!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக விக்ரமன் மீது வழக்கு தொடுத்திருந்தார் அமுதவாணன். தன்னை வில்லாகவும், ஜனனியை அம்பாகவும் விக்ரமன் குறிப்பிட்டதாக கூறி அமுதவாணன் கொடுத்த வழக்கில் ADK நீதிபதியாக இருந்தார். இந்த வழக்கில் அமுதவாணனின் வழக்கறிஞராக அசீம் செயல்பட்டார். அசீமின் வாதத்தை பாராட்டியதோடு, இந்த வழக்கின் வெற்றியாளர் அவர் தான் எனவும் ADK சொல்லியிருந்தார்.

இந்நிலையில், டைனிங் டேபிளில் அமுதவாணனோடு சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ஜனனி. அப்போது "இந்த வழக்கு முடிஞ்சுபோச்சு அம்பு, வில் யாரும் இல்லைன்னு சொல்லிட்டாங்க என அமுதவாணன்" சொல்கிறார். இதைத் தொடர்ந்து பேசிய ஜனனி,"என்னால முடியல. நான் வீக் ஆகிட்டே இருக்கேன்னு தோணுது. என் டவுட்களை கிளியர் பண்ண அவர்கிட்ட பேசணும். ஆனால் அவரும் பேசமாட்டேங்குறாரு. அவருக்கு அது புரியவே இல்லை. நான் நார்மலா தான் இருப்பேன். திடீர்னு வீக்கான என்னைவிட மோசமா யாரும் இருக்க மாட்டாங்க.. கஷ்டமா இருக்கு" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழுதுவிடுகிறார்.

அப்போது அருகில் இருந்த அமுதவாணன்,"அழாத, எல்லோரும் வந்து என்ன என்னன்னு கேப்பாங்க. நீ எவ்வளவு ஸ்டராங்கான பொண்ணு. உன்னை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன். இதுக்கு போய் அழலாமா? விடு" என ஜனனியை தேற்றுகிறார்.

 

Also Read | ADK - அசீம் வழக்கில் அனல் பறக்கும் விக்ரமனின் வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss 6 Tamil Janany Breaks Down while talking with amudhavanan

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janani, Vijay Television, Vijay tv will find this news story useful.