பிக்பாஸ் நிறுத்தப்பட்டதா..?!! வீட்டுக்குள் மழைநீர்.. அச்சமடைந்த போட்டியாளர்கள். என்ன நடந்தது.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மழையின் காரணமாக பிக்பாஸ் போட்டி நிறுத்தப்பட்டதாக வந்த தகவலின் விவரம் இதுதான். 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி தற்போது ஐம்பது நாட்களை கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தினமும் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, சுவாரஸ்யம் கூட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அண்மையில் நிவர் புயலால் விடாது பெய்ந்த கண மழையில், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும், இதனால் போட்டி நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. 

இதை தொடர்ந்து, நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால், போட்டியாளர்கள் அச்சமடைந்துவிட்டதாகவும், இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, விஜய் டிவியின் நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வி.ஐ.பி ரூம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது பிக்பாஸ் வீட்டில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வரப்படுவார்கள் எனவும் தெரிவிக்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள். 

இந்த விவகாரம் பற்றி, இனி வரும் எபிசோடுகளில் தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

 

பிக்பாஸ் நிறுத்தப்பட்டதா..?!! வீட்டுக்குள் மழைநீர்.. அச்சமடைந்த போட்டியாளர்கள். என்ன நடந்தது.? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

மழையால் பிக்பாஸ் போட்டி நிறுத்தமா | biggboss 4 tamil halted due to nivar cyclone rain

People looking for online information on BiggBoss 4, Kamal Haasan will find this news story useful.