"ஆதாமா? அவரு எங்க இருக்காரு?" - திரும்பவும் கமலிடம் சிக்கிய GP முத்து.. இந்த வார சம்பவம் BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில், டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடியை அடுத்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்த GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும், பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும் அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்களும் மிகவும் பிரபலமானவை.

அந்த வகையில், ஆறாவது சீசனின் முதல் போட்டியாளராக GP முத்து களமிறங்கி இருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் கேமரா முன்பு சென்று தான் தனியாக இருப்பதாகவும் பயமாக இருப்பதாகவும் GP முத்து  புலம்பினார். பின்பு கமலிடம் உரையாடிய GP முத்து, தனியாக வீட்டிற்குள் இருப்பது பயமாக இருக்கிறது என்றும், மற்றவர்களுடன் சேர்ந்து உள்ளே வருகிறேன் என்றும் குறிப்பிட்டார். அப்போது இதுவும் போட்டியின் ஒரு பகுதி என கூறிய கமல், அடுத்த நபர் காலை 4 மணிக்கு தான் உள்ளே வருவார் என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டதும் பதறிய ஜிபி முத்து, 4 மணி என்றால் மூச்சே போய்விடும் என்றும், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என பயத்திலேயே குறிப்பிடுகிறார். இதன் பின்னர், வேண்டுமென்றே கமலும் மேலும் ஜாலியாக அவரை பயமுறுத்த கதிகலங்கி போகிறார் ஜிபி முத்து.

தொடர்ந்து பேசிய கமல், “ஆதாம் வரும்வரை ஏவாளுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர் தனியாக தானே இருந்திருப்பார்” என உதாரணம் சொல்ல, அதற்கு ஜிபி முத்து, ‘ஆதாமா?’ என்று கேட்டு அலறவிட்டார். அவரும் அலறிவிட்டார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சகஜமான ஜிபி முத்து அனைவருடனும், தனக்கே உரிய இயல்புடன் உதவுவது, பேசுவது, சிரிப்பது என்று இருந்தார். ஆனால் அவருக்கும் தனலட்சுமிக்குமான உரையாடல்கள், இதை தொடர்ந்து ஜிபி முத்து அழுதது உள்ளிட்டவை பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தின. எப்படியோ ஒரு வாரம் போய்விட, பெஸ்ட் பெர்ஃபார்மராக ஜிபி முத்து வந்துள்ளார். 

இந்நிலையில் இந்த வார இறுதிக்கான ப்ரோமோவில் கமல் ஜிபி முத்துவிடம் பேசுகிறார். அதில் ஜிபி முத்துவின் கையில் இருந்தது பற்றி கமல் கேட்கவும், அதற்கு ஜிபி முத்து  ‘பாதாம்’ என்று சொல்ல, அதற்கு ஜிபி முத்துவை கமல், ‘பாதாம் தெரியுது.. ஆதாம் தெரியலயா? ஆதாம் எவ்வளவு வருத்தப்படுகிறார்’ என சொல்லி ஜாலியாக வம்புக்கு இழுக்கிறார். அப்போதும் ஜிபி முத்து வெள்ளந்தியாக, “ஆதாமா.. அவரு எங்க இருக்காரு?” என கேட்க, ஒரே கலகலப்பானது.

இது தவிர, இந்த வாரம் பல முக்கிய பஞ்சாயத்துக்களை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் கம்ல் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss tamil kamal comment Badhaam Adhaam GP Muthu

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kamal Haasan, Vijay Television, Vijay tv will find this news story useful.