கார்னர் பண்றது, பாலிடிக்ஸ் பண்றது, 'அதிகாரம்' பண்றது... இதெல்லாம் எனக்கு புடிக்காது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி அர்ஜுனன், சோமசேகர், கேப்ரியலா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத் என மொத்தம் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து இருக்கின்றனர்.

கொரோனா காரணமாக இந்தமுறை பார்வையாளர்கள், போட்டியாளர்களின் உறவினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. பதிலாக காணொளி காட்சி மூலம் உறவினர்கள், நண்பர்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தமுறை இளமையான போட்டியாளர்கள் அதிகம் களமிறங்கி இருப்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தி வாசிப்பில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளர் அனிதா சம்பத் போட்டியாளர்களில் ஒருவராக வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

இவரின் தமிழ் உச்சரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு வலிமையான போட்டியாளராக இவர் உருவெடுப்பார் என தெரிகிறது. பிக்பாஸ் போட்டியாளராக வீட்டுக்குள் செல்லுமுன் தன்னைப்பற்றியும், தன்னுடைய குடும்பம் குறித்தும் தெரிவித்த அனிதா தனக்கு ஒருவரை கார்னர் செய்வது, பாலிடிக்ஸ் செய்வது, மற்றவர்களை அதிகாரம் செய்வது ஆகியவை தனக்கு பிடிக்காது என ஓபனாக தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Anchor Anitha Sampath entered House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.