யாருலே தப்பு... ? - சேரன் குறித்து கவினிடம் அழுத லாஸ்லியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் சேரன் இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், இந்த வாரத்துக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் நடந்த பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல் இருந்ததற்காக அன்பான சேரன் அப்பாவை லாஸ்லியா நாமினேட்  செய்தார்.

நம்ம பொண்ணு தன்னை நாமினெட் செய்ய மாட்டாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சேரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், அடுத்ததாக வெளியாகியுள்ள 2வது புரொமோ வீடியோவில் சேரன் அப்பாவை நாமினேட் செய்ததை நினைத்து நண்பன் கவினிடம் கூறி லாஸ்லியா வருத்தப்படுகிறார்.

அந்த வீடியோவில், சேரன் அப்பாவ நியாயமா நாமினேட் செய்தது தப்பா? அவர் ஜெயில் டாஸ்கில் என்னை சொன்னப்போ நியாயமா நடந்துக்கிட்டாரு.. யாருலே இப்போ தப்பு..? அவரிடம் எதிர்ப்பார்த்தது என் தப்பு தான்..’ என லாஸ்லியா கதறி அழுதார்.

இன்றைய எபிசோடின் முடிவிலேயே லாஸ்லியா மற்றும் சேரனின் கருத்து வேறுபாடு நீங்கிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

யாருலே தப்பு... ? - சேரன் குறித்து கவினிடம் அழுத லாஸ்லியா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 3 Vijay TV Losliya crying Cheran Kavin Promo 2

People looking for online information on Bigg Boss 3, Bigg Boss Tamil 3, Cheran, Kavin, Losliya will find this news story useful.