"மொளகா பொடியை எடுத்து உஃப்புனு ஊதினா" தனலெட்சுமிக்கு THUG LIFE கொடுத்த கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.

Advertising
>
Advertising

இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர்.

இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம். இந்த டாஸ்க் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், வார இறுதியில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் விளையாட்டு குறித்து என்ன மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்துவார் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக இருந்தனர்.

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பலரும் Safe Zone ஆடி தங்களை காத்துக் கொள்வதை விமர்சனம் செய்திருந்த கமல்ஹாசன், இப்படியே தொடர்ந்து நடந்தால் பிக்பாஸ் வரலாற்றில் போரிங் சீசனாக இது மாறி விடும் என்றும் தெரிவித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், ஏலியன் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் நிறைய சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் நிகழ்ந்திருந்தது. அசீம் மற்றும் அமுதவாணன் சண்டை போட்டது, இரவில் பூக்களை அசீம் திருடியது, பழங்குடி இன மக்கள் அணிக்குள்ளேயே நிகழ்ந்த குழப்பங்கள், சண்டைகள் என பல விஷயம் அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்தி இருந்தது. அப்படி ஒரு சூழலில், தனலட்சுமி மற்றும் ஷிவின் ஆகியோர் மாறி மாறி மோதிக் கொண்டது தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது Luxury பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருவதாக தெரியும் நிலையில், ஒரு போட்டியாளருக்கு இரண்டு லாக் மற்றும் ஒரு சாவி கொடுக்கப்படும். இந்த போட்டியில் ஜெயிக்க கூடாது என நினைப்பவர்களுக்கு லாக்கை பெல்ட்டில் போட வேண்டும். இப்படி இருக்கையில், தனலட்சுமி பெல்ட்டில் சாவி போட நினைக்கும் ஷிவின், அவர் அருகே செல்கிறார்.

ஆனால், தனது பெல்ட்டில் பூட்டை போட விடாமல் தனலட்சுமி தடுக்க மெல்ல மெல்ல இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பிடித்து தள்ளி விடவும் செய்கின்றனர். மற்ற போட்டியாளர்களை அருகே விடாமல் இருவரும் மோதிக் கொள்ள, நீண்ட நேரமாக இது சென்று கொண்டே இருக்கிறது. நீச்சல் குளம் வரை விழுந்து இருவரும் மாறி மாறி தள்ளி விட்டுக் கொண்டே இருந்த இந்த சம்பவம் அதிகம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களை கமல்ஹாசன் போட்டியாளர்கள் முன் விமர்சனம் செய்தார். அப்போது விசாரணை நாற்காலியில் தனலெட்சுமியை அமர வைத்து ஷிவின் பல கேள்விகளை தனலெட்சுமியிடம் வைத்தார். ஷிவின் தனாவிடம் பேசியது, "ரியாக்டர் ஷேரில் இருப்பவர்களை கோபப்படுத்தனும் அழுக வைக்கனும். கோபம் அழுகை வெங்காயத்தை கண்ணில் வைத்து தேய்த்தால் வரும் அழுகை, அழுகையாயிடும்னு நினைக்கிறியா? என்கிறார். அழுகைக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உள்ளது. கண்ணில் இருந்து தண்ணீர் வந்தால் கண்ணீர். மனசுல இருந்து வந்தா அது அழுகை. என்ன வேணா பண்ணி ரியாக்ட் பண்ண வைக்கலாம்னா இந்த வீட்டில் என்ன வேணா பண்ணிருக்கலாமே! அந்த இடத்தில் நான் இருந்தேன் தாங்கி கொண்டேன். ராம் இருந்திருந்தால்? அவனுக்கு ஏற்கனவே கண்ணில் கட்டி." என ஷிவின் பேச, குறுக்கிடும் கமல்ஹாசன், "அதைவிட எஃபெக்ட்டிவாக இருக்கனும்னா மிளகாய் பொடியை எடுத்து உஃப்புனு ஊதினா சரியா போயிடும்". என கமல் கூற ஒட்டு மொத்த அரங்கமும் கைதட்டி ஆரவாரம் செய்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Season 6 Tamil Kamal Haasan Thug life moment

People looking for online information on Biggboss, BIGGBOSS season 6, BIGGBOSS Season 6 Tamil will find this news story useful.