"சண்டை போட்டவங்க ஒண்ணு சேருற நாளு போல".. அசிம் - மகேஸ்வரி, ஜிபி முத்து - விக்ரமன்.. நெகிழ்ச்சி MOMENTS!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிக்பாஸ்-ல இருந்து வெளியேறும்போது கதிர் சொன்ன வார்த்தை.. கலங்கிப்போன போட்டியாளர்கள்..!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது. இதனிடையே, சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி இருந்தது.

இதற்கு மத்தியில், சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளியேறி உள்ளார். அவர் எடுத்த முடிவு மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தான் எடுத்த முடிவிற்கான காரணத்தையும் கதிரவன் விளக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஒரு போட்டியாளருடன் நட்பை வளர்க்காமல் விட்டு விட்டோம் என நினைத்தால் அவர் கையில் Friendship Band கட்டிவிட்டு நட்பை தொடங்கும்படியும் பிக் பாஸ் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் சக ஹவுஸ்மேட்ஸ் ஒருவருக்கு Friendship Band-ஐ கட்டி அதற்கான காரணத்தையும் தெரிவிக்கின்றனர். இதில் நிவாஷினி ஜிபி முத்துவிற்கும், ஷிவின் அசல் கோலாருக்கும், தனலட்சுமிக்கு ராமும் Friendship Band கட்டி அதற்கான காரணத்தை கூறுவதாகவும் தெரிகிறது.

அதே போல, மகேஸ்வரி, குயின்சி, சாந்தி உள்ளிட்டோர் அசிமுக்கு Friendship Band-ஐ கட்டி விடுகின்றனர். மகேஸ்வரி திரும்பவும் வந்த போது அவருக்கு அசிமுக்கும் சண்டை நடந்தது. சமீபத்தில் கூட முட்டை விவகாரத்தில் அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்திருந்தனர். அப்படி ஒரு சூழலில், தற்போது அசிம்க்கு Band கட்டி பேசும் மகேஸ்வரி, வந்த நாள் முதல் அசிமிடம் ஒரு கனெக்ட் இல்லை என்றும் இனி இது வேண்டாம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவரை போல, குயின்சியும் Friendship-பே வெச்சுக்கக் கூடாதுன்னு நெனச்ச ஆள் அசிம் என்றும் கூறி அவர் கையில் Band கட்டி இருந்தார்.

மேலும், விக்ரமன் கையில் Band கட்டிய ஜிபி முத்துவும் நெகிழ்ச்சியான கருத்துக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அதை கவனிக்க தவறிட்டோமா?".. அசீம் பத்தி விக்ரமனுக்கு வந்த சந்தேகம்.. மகேஷ்வரி சொன்ன விஷயம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss new friendship band round emotional moments

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU, Maheshwari, Vikraman will find this news story useful.