"கதவை சாத்துங்கப்பா".. முதல் முறையா ஒண்ணா சேர்ந்து நின்ன ஹவுஸ்மேட்ஸ் 😂.. எதுக்காக தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "அண்ணா, எல்லா எமோஷனல் சீன்ஸ் பார்த்தப்போ".. வாரிசு படம் பற்றி மனம் உருகிய தமன்... Viral Tweet!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் Guest வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், ஏன் அவர்கள் வருகை தந்தார்கள் என்பது போல போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில் இரண்டாவது நாளில், பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இவர்களும் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி, முந்தைய நாட்களில் கேம் ஆடிய விதம் குறித்தும் நிறைய கேட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் போட்டியாளர்கள் அனைவரும் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தருவதற்கு முன்பாக வெளியே நின்றபடி பார்வதி மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், "என்ன ரெடியா?" என போட்டியார்களிடம் கேட்கின்றனர். ஆனால் போட்டியாளர்களோ ரெடி இல்லை என்பது போல கூறிக்கொண்டு நேராக கதவருகே சென்று அதை பிடித்து அவர்களை உள்ளே வர முடியாமல் செய்தது போலவும் செய்து சைகை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து போட்டியார்களுமே கதவருகே சென்று நின்று கதவை திறக்க முடியாதபடி செய்து ஜாலியாக கத்தியபடியும் இருக்கின்றனர். முன்னதாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அகமது மீரான் ஆகியோர் வந்திருந்து பல கருத்துக்களை கூறியிருந்தது போட்டியாளர்களை அதிகம் கதிகலங்க வைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் புதிதாக இனி யாரும் Guest என வர வேண்டாம் என்பது போல அனைத்து போட்டியாளர்களும் ஒற்றுமையாக இருந்து ஜாலியாக செய்த இந்த விஷயம் பெரிய அளவில் பிக் பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | "ADK மாமாவும் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருக்கு".. கணிச்சு சொன்ன மைனா!!.. Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Housemates united before shobana and parvathy entry

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Housemates, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, VJ Parvathy, Vj shobana will find this news story useful.