'' INSULT பண்றத கேட்டு வாய மூடிட்டு இருந்தேன்....'' - பிக்பாஸ் அபிராமி சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை அபிராமி. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனையடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்ஏ படித்து வருவதாகவும், தொடக்கத்தில் இருந்தே மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அவருக்கு முறையாக பதிலளிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இரண்டு தினங்களுக்கு முன் தனது இறுதித் தேர்வு எழுதியதாக குறிப்படிட்ட அவர் அப்போது நடைபெற்ற சிக்கல் குறித்து அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில், ''நாங்கள் காலை 9:30 மணியில் காத்திருந்தோம். ஆனால் 2:30 மணிக்கு தான் தேர்வை தொடங்கினார்கள். நான் தேர்வு முடித்து அவர்கள் சொன்ன படி பிடிஎஃப் வடிவத்தில் அனுப்பினேன்.

ஆனால் அது டெலிட் ஆகி விட்டதாக சொன்ன அவர்கள், மாணவர்களை மீண்டும் அனுப்ப சொல்கின்றனர். இதுகுறித்து துறைத்தலைவரை நான் தொடர்புகொண்டபோது அவர் முறையாக பதிலளிக்கவில்லை. உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனையை தீர்க்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உங்களில் யாருக்காவது தெரிந்ததால் எனக்கு சொல்லுங்கள். என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

'' INSULT பண்றத கேட்டு வாய மூடிட்டு இருந்தேன்....'' - பிக்பாஸ் அபிராமி சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss fame Actress Abhirami shares shocking video | பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி பகிர்ந்த பரபரப்பு குற்றச்சாட்டு

People looking for online information on Abhirami, Bigg boss will find this news story useful.