"நான் CUP வாங்குனதுக்கு சமம்".. பிக் பாஸ் தனாவுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிக வெற்றிகரமான சீசனாகவும் அமைந்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | கரிச்சு கொட்டிய ஈஸ்வரி.. ஒரே ஒரு செக்.. கோபி மூஞ்சில கரிய பூசிய பாக்யா.! baakiyalakshmi

இதற்கு காரணம் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த 21 பேரும் மிகச் சிறப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக அதிக பிரபலம் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தனலட்சுமி, முதல் நாள் முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஃபினாலே வரை அவர் முன்னேறுவார் என பலரும் குறிப்பிட்டு வந்த சூழலில் நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஆனால் அதே வேளையில், பாதியில் வெளியே வந்த தனலட்சுமிக்கு மக்கள் மிகுந்த ஆதரவையும் அளித்திருந்தனர். மக்கள் செல்வி என்று தனலட்சுமியை குறிப்பிட்டு ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்காக "மக்களுடன் தனா" என்ற பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றிலும் தனலட்சுமி கலந்து கொண்டிருந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது பற்றி பல்வேறு விஷயங்களை தனலட்சுமி பகிர்ந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் வார இறுதியில் ஒருமுறை கமல்ஹாசன் தோன்றியிருந்த போது, 'Hardwork' என்ற விருது தனலட்சுமிக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்போது உருக்கமாக பேசி இருந்த தனலட்சுமி, ஆறு வருட உழைப்பு தான் இது என்றும் இது அனைத்திற்கும் காரணம் தாய் தான் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

இது பற்றி தற்போது பேசியுள்ள தனலட்சுமி, "நமக்கு எது கிடைக்குதோ, இல்லையோ நம்ம அந்த வீட்டுல ஒன்னு பண்ணும் போது மத்தவங்க சொல்லணும், அவங்க அதை சொன்னால் தான் அடுத்தடுத்து ஒரு எனர்ஜி வரும். ஆனால், அந்த வீட்டுல போனதும் அதை விட்டுட்டேன். திடீர்ன்னு எந்திரிச்சு வீட்டுல பேசாதவர்கள் எல்லாம் எனக்கு அந்த விஷயத்தை கொடுத்தாங்க.

அப்ப நான் வந்து உண்மையாவே விளையாண்டு இருக்கேன். அது அவங்களுக்கு புடிச்சிருக்கு. அவங்களுக்கும், எனக்கும் தான் செட் ஆகல. அதை பார்க்காம அவங்க கொடுக்குறாங்க. அதுவும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு அது கையில வருதுன்னா சாதாரண விஷயம் கிடையாது. இதுக்கு முன்னாடி ஒரு ஸ்டேஜ் ஏறி இருககேன், வீடியோ பண்ணதுக்காக. நான் நினைச்ச இடத்துல நின்னு அந்த விஷயத்தை வாங்குனது வந்து அன்னைக்கு தான் எனக்கு பயங்கர எமோஷன் எல்லாம் இருந்தது. அது நான் கப்பு வாங்கினதுக்கு சமம். மக்களும் ஏத்துக்கிட்டு, கமல் சாரும், பிக் பாஸும் ஏத்துக்கிட்டு அது என் கையில் வரும் போது, நம்ம நினைச்சா விஷயத்தை நம்ம பண்ணிட்டோம் அப்படின்ற ஒரு ஃபீல்" என தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Also Read | "முதல் படம் Music பண்ணப்போ, இமான் ஆசீர்வாதம் வாங்குன ஆட்டோ டிரைவர்".. மனம்கலங்கும் பின்னணி

"நான் CUP வாங்குனதுக்கு சமம்".. பிக் பாஸ் தனாவுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Dhanalakshmi emotional about her moment in house

People looking for online information on Bigg Boss Dhanalakshmi, Dhanalakshmi will find this news story useful.