BB6 : வலிய சென்று கேட்ட மகேஸ்வரி.. ஊட்டிவிட சொல்லி அமுதவாணன் அட்ராசிட்டி.! கடைசியா ஒரு ட்விஸ்ட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பித்துள்ள லக்சூரி பட்ஜெட் டாஸ்கின் ஒரு அங்கமாக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கின்றனர். இதில் ஒரு அணியை சேர்ந்த போட்டியாளர்கள் இன்னொரு அணி போட்டியாளர்களுக்கு அதிக உபசரிப்புகளையும் சலுகைகளையும் செய்து தர வேண்டும். அவர்கள் கேட்பதை செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்களுடைய தேவைகளை தானாகவே சென்று கேட்டறிந்து செய்ய வேண்டும். அப்படித்தான் விஜே மகேஸ்வரி, அமுதவாணனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, அவரோ தனக்கு தன் அம்மா ஞாபகம் வந்துவிட்டதாகவும், தனக்கு சாப்பாடு ஊட்டி விட வேண்டும் என்றும் கேட்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஜே மகேஸ்வரி,  ‘மெட்டி ஒலி’ சாந்தி என மாறி மாறி சென்றது இந்த பேச்சு. கடைசியில் இந்த பணியை ஷிவின் கணேசன், செய்வதாக ஒப்புக்கொண்டு அமுதவாணனிடம் சென்று கேட்கிறார். அதற்கு அமுதவாணனோ,  “நான் முதலில் சாந்தி மேடமிடம் கேட்டேன், பிறகு மகேஸ்வரிடம் கேட்டேன். 10 நிமிஷத்துக்கு மேலாக, மாற்றி மாற்றி வருகிறேன் என்று சொன்னார்கள்” என்று புலம்பி புகார் அளிக்க, இறுதியாக, “யாரு உங்களுக்கு ஊட்டிவிட வேண்டும்?” என்று ஷிவின் கணேசன் கேட்கிறார்.

அதற்கு அமுதவாணன் கடைசி பதிலாக தனக்கு சாந்தி ஊட்டி விட வேண்டும் என்று கூறுகிறார். இதனைத் தொடர்ந்து சாந்தி அவருக்கு ஊட்டி விட, தன் அம்மா நினைவு வந்து விட்டதாக கூறும் அமுதவாணன் கற்பூர பொம்மை பாடலை பாடிக் கொண்டே ஊட்டி விட வேண்டும் என்று சொல்லி சாந்தியை வலியுறுத்துகிறார். அவரும் பாடிக் கொண்டே அமுதவாணனுக்கு ஊட்டி விட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil amuthavanan asked to feed food to housemates

People looking for online information on Amuthavanan, Bigg boss 6 tamil, Housemates, Vj maheswari will find this news story useful.