மக்கள் மனம் வென்று மகுடம் சூடிய ராஜூ.. ஆஹா 4வது சீசன் வின்னர் ஆரியின் அற்புத வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.

Advertising
>
Advertising

கிராண்ட் ஃபினாலே

பிக்பாஸ் 5வது சீசனில், பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். கடைசி நாள் 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர். அவர்களுள் நிரூப், அமீர், பாவனி ஆகியோர் கிராண்ட் ஃபினாலேவின் போது எலிமினேட் செய்யப்பட்டனர். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் ராஜூ மற்றும் பிரியங்கா தான்.

ராஜூ பாய் வெற்றி

இவர்கள் இருவரில் ராஜூ பாய் வெற்றி பெற்றதான தகவல்கள், கிராண்ட் ஃபினாலேவுக்கு முன்னதாகவே பரவி, இன்னும் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி இரவு 11 மணி வரை ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் குறித்த அறிவிப்பும் வெளியானது. அதன்படி ராஜூ பாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

Also Read: "எத்தனையோ STARS-க்கு நான் இந்த வேல தான் பாத்துட்டு இருந்தேன்!" .. அழுதுகொண்டே ராஜூ ரிவீல் செய்த உருக்கமான உண்மை!

சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அத்துடன் தம்முடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்தும் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் ஆரி வாழ்த்து

இதனை அடுத்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ராஜூவுக்கு நடிகர் ஆரி தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 4வது சீசனில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டிலை வென்றார். இந்த சீசனில் பாலாஜி ரன்னர் அப்-ஆக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Also Read: வருது.. வருது.. 24 மணி நேரமும் ஓடும் Biggboss OTT எப்படி இருக்கும்?.. கமல்ஹாசன் பேசும் ப்ரோமோ!

4வது சீசன் டைட்டில் வின்னர்

மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ஆரி, கடந்த 4வது பிக்பாஸ் சீசனில் டைட்டிலை வென்றதற்காக பிக்பாஸ் டிராபி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதுடன், அப்போது அவருக்கு ரூபாய் 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ராஜூவுக்கு வாழ்த்து

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது  சீசன் வின்னரான ராஜூவுக்கு, 4வது சீசன் வின்னரான ஆரி தம்முடைய வாழ்த்துக்குறிப்பில், “பெரும்பாலான மக்களின் மனங்களையும், வாக்குகளையும் வென்று, பிக்பாஸ்5 மகுடம் சூடிய  ராஜூ ஜெயமோகன் சகோதரருக்கும், மக்களிடம் தனக்கென ரசிகர்களை சம்பாதித்து இறுதி வரை சென்ற இறுதி போட்டியாளர்களுக்கும், இடைவிடாது  கடினமாக போராடிய அனைத்து போட்டியாளர்களுககும் வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read:  "செவரு உயரம் பத்தாது.. ஏத்தி கட்டுங்க!".. Bigg Boss OTT ப்ரோமோவுல கமல் சார் யார சொல்றாரு?

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 4 winner aari wishes to bigg boss 5 title winner raju

People looking for online information on Aari bigg boss, Bigg Boss 5 Tamil, Bigg boss aari, Bigg boss raju title winner, Bigg boss tamil 5 raju title winner, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Raju title winner, Raju title winner bigg boss will find this news story useful.