BHARATHI KANNAMMA : அந்த DNA RESULT-அ நம்பாத... குட்டையை குழப்பிய வெண்பா .. மறுபடியும் மொதல்ல இருந்தா...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "துணிவும், வாரிசும் ஒரே நாள் ரிலீஸ் ஆனா".. எதிர்பார்ப்பை எகிற வைத்த ஷ்யாம்.. Exclusive

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் செய்ய முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர். அப்படி ஒரு சூழலில், வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது. இதனால் வெண்பா கூட அதிக ஏமாற்றம் அடைந்திருந்தார்.

முன்னதாக, குழந்தை லட்சுமிக்கு ஏற்கனவே தனது அப்பா பாரதி தான் என்பதும், தன் தங்கை ஹேமா தான் என்பதும் தெரியும். இதனிடையே குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடச் சொல்லி அனைவரையும் வற்புறுத்த அப்போது கண்ணம்மா, "நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான். உன்னை யாரோ ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள்.

அதன் பிறகு உன்னை உன் தந்தை எடுத்து வளர்த்தார். மற்றபடி நான் தான் உன் அம்மா" என உண்மையை போட்டு உடைத்து விட்டார். மேலும் ஹேமாவை கடத்தி செல்லும் வெண்பா கும்பலிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியிலும் கண்ணம்மா ஈடுபட்டிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரண்டு பேரும் தனது குழந்தைகள் தான் என்பதை உறுதி செய்ய டி என் ஏ டெஸ்ட்டை பாரதி எடுத்திருந்த நிலையில், ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் பாரதியின் குழந்தைகள் தான் என்பதும் உறுதியானது. பாரதியின் நீண்ட நாள் சந்தேகங்கள் தீர்ந்த நிலையில், மறுபுறம் தனது அப்பா யாரென தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருந்தார் ஹேமா. அப்போது அவரிடம் நான் தான் உன் அப்பா என பாரதி கூறவும் செய்கிறார்.

இப்படியாக, ஒவ்வொரு எபிசோடும் முழுக்க முழுக்க விறுவிறுப்பு நிறைந்து பாரதி கண்ணம்மா தொடரில் சென்று கொண்டிருப்பதால், ரசிகர்களும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்து ஒரு பரபரப்பு சம்பவமும் பாரதி கண்ணம்மா தொடரில் அரங்கேற உள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கும் தான் தந்தை என்பது உறுதியானதும் அனைவர் முன்னிலையிலும் கண்ணம்மாவிடம் பாரதி மன்னிப்பு கேட்கிறார். விட்டால் இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் என இதை கண்டதும் கொதித்து போகும் வெண்பா, "இந்த ரிசல்ட் உண்மையா இருக்குறதுக்கு வாய்ப்பே இல்ல பாரதி. இது Fake. உன்ன யாரோ ஏமாத்தி இருக்காங்க. 2 தடவ Fertility Test எடுத்தே. ரெண்டு தடவையும் என்ன ரிசல்ட் வந்துச்சு. இந்த ஜென்மத்துலயே உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதுன்னு. அப்புறம் எப்படி இந்த குழந்தைங்களோட DNA மேட்ச் ஆகும்?" என வெண்பா ஆவேசத்துடன் கூறுகிறார்.

அங்கிருந்த அனைவரும் இதனைக் கேட்டு அதிர்ச்சி ஆக, பாரதியை நோக்கி கேள்வி கேட்கும் கண்ணம்மா, "என்ன சார் திருதிருன்னு முழிக்குறீங்க?. வெண்பா கேக்குற கேள்வி நியாயமா தானே இருக்கு. பதில் சொல்லுங்க சார்" என்கிறார். இதனைக் கேட்டதும் என்ன சொல்வதென தெரியாமல் முழித்துக் கொண்டே நிற்கிறார் பாரதி.

குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சேரலாம் என பாரதி வரும் போது இப்படி வெண்பா தூக்கி போட்ட குண்டு கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "துணிவு படமும் பொங்கலுக்கு தான்".. தெரிஞ்சதும் விஜய் சொன்ன வார்த்தை.. 'வாரிசு' நடிகர் கொடுத்த Update

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi kannamma venba statement about bharathi

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Vijay tv will find this news story useful.