“உன் அழிச்சாட்டியத்துக்கு முடிவு கட்றேன்”.. வெண்பாவை சுட்ட சௌந்தர்யா? பாரதி கண்ணம்மா புரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை பற்றி தனக்கு தெரியும் என்று பொய் சொல்லி கண்ணம்மாவை ஏமாற்றி வந்த வெண்பா, கண்ணம்மாவிடம், “நீ எப்படியாவது பாரதியிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டால், இரண்டாவது குழந்தை பற்றிய விபரத்தை சொல்கிறேன்” என்று கூறி மிரட்டி பிளாக்மெயில் செய்து வந்தார்.

இதனையடுத்து கண்ணம்மாவும் விவாகரத்து கையெழுத்து வாங்குவதற்கு மும்முரமாக இருந்தார். அப்போது அதை கண்டுபிடித்து விட்ட சௌந்தர்யா என்ன விஷயம் என்று வினவ, தன் இரண்டாவது குழந்தை பற்றி தெரிந்துகொள்வதற்காக இதை செய்தே ஆக வேண்டும் என்று கண்ணம்மா கறாராக கூற, அப்போதுதான் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் ஒரு உண்மையை உடைத்துச் சொல்கிறார்.

அதன்படி கண்ணம்மாவுக்கு சௌந்தர்யா தான் தான் பிரசவம் பார்த்ததாகவும், அவருக்கு பிறந்த இரண்டாவது குழந்தை பற்றி தனக்கு தெரியும் என்றும் கூறுகிறார். இதை கேட்டு அதிர்ந்தும் குழம்பியும் போன கண்ணம்மாவோ, ஏற்கனவே பாரதி தனக்கு பிரசவம் பார்த்ததாக கூறி இருந்ததை குறிப்பிட்டு, “யார் எனக்கு பிரசவம் பார்த்தீர்கள்? இன்னும் எத்தனை உண்மைகள் எனது பிரசவத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன?” என்று கேட்கிறார்.

அப்போது சௌந்தர்யா,  “பாரதி உனக்கு பிரசவம் பார்த்தது எனக்கு இப்போது நீ சொல்லிதான் தெரியும். ஆனால் அன்று மருத்துவமனையில் உனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் தான் நான் வந்தேன். அப்போது உனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்கு நான் பிரசவம் பார்த்தேன்” என்றும், அந்த குழந்தைதான் ஹேமா என்றும் கூற, கண்ணம்மாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

உடனே தன் குழந்தையை தூக்கிச் செல்ல உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது? என கண்ணம்மா சௌந்தர்யாவின் மீது ஆத்திரப்பட, அவரோ, “உன்னையும் பாரதியையும் சேர்த்து வைக்கதான் இப்படி செய்தேன்” என கூற, கண்ணம்மா தற்காலிகமாக சமாதானம் ஆகிறார்.

எனினும், “உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி, தூண்டிவிட்டு, மிரட்டி பிளாக்மெயில் செய்தது யார்? வெண்பாவா?” என்று சௌந்தர்யா கேட்க, கண்ணம்மா ‘ஆம்’என்று பதிலளிக்கிறார். அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்ட சௌந்தர்யா, வெண்பாவை நோக்கிச் சென்று துப்பாக்கியால் சுடக் கூடிய புரோமோ அடுத்ததாக வெளியாகி இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆகா இத்தனை வருடங்களாக பாரதி மற்றும் கண்ணம்மாவை சில நாடகங்களை நடத்தியும் குழப்பங்களை செய்தும் பிரித்து வைத்த வெண்பாவின் கதையை சௌந்தர்யா ஒரே துப்பாக்கிச்சூட்டில் முடித்து விட்டாரே? அப்படியானால் பாரதியும் கண்ணம்மாவும் இணைய போகிறார்களா? இரண்டு குழந்தைகளும், பாரதி - கண்ணம்மா ஆகிய இரண்டு பேரின் குழந்தைகள் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வந்து குடும்பம் ஒன்றாக போகிறதா? என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

சிலர் இதெல்லாம் கனவாக இருக்கும் என்றும் பேசி வருகின்றனர்.

“உன் அழிச்சாட்டியத்துக்கு முடிவு கட்றேன்”.. வெண்பாவை சுட்ட சௌந்தர்யா? பாரதி கண்ணம்மா புரோமோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma promo soundharya shoots venba vijay tv

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Promo today, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannammaa, Fareena Venba, Farina venba, Trending, Venba, Villi will find this news story useful.