‘கடைசி வரை அண்ணி கையால சாப்பாடு கிடையாது’.. பாரதி போட்ட பலே கண்டிஷன்! BHARATHI KANNAMMA

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான மற்றும் பெருவாரியான ரசிகர்களைக் கொண்ட சீரியல் பாரதி கண்ணம்மா.

Advertising
>
Advertising

பாரதி மற்றும் கண்ணம்மா

இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரேவீட்டில் வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் பாரதி, கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் விண்ணப்பித்திருந்தது தான். இதனை தொடர்ந்து பாரதியின் விவாகரத்து வழக்கை விசாரித்த கோர்ட் இருவரையும் 6 மாதங்களாவது சேர்ந்து வாழ வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

என்னதான் 8, 9 வருடங்களாக இருவரும் பிரிந்திருந்தாலும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்றால் 6 மாதமாவது சேர்ந்து வாழவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தனர். இவர்களின் குழந்தைகள் கண்ணம்மாவின் மாமியாரும் பாரதியின் தாயாருமான சௌந்தர்யாவின் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

Also Read: வெறித்தனம்.. Title-னாலே இந்த மனுசன் தான்! தமிழ்ப்படம் இயக்குநருடன் விஜய் ஆண்டனி இணையும் அடுத்த படத்துக்கு பேரு  இதுவா?

கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டு வாழ தயார்

இந்த நிலையில் பாரதி கொஞ்சம் கொஞ்சமாக வெண்பா பற்றிய புரிதலுக்கு வந்தார். இதனை தொடர்ந்து கண்ணம்மாவை பற்றி பலரும் நல்லவிதமாய் சொல்லக் கேட்ட பாரதி,  ‘நாம் தான் தவறு செய்கிறோமோ?’ என்கிற நினைப்பு வந்து கண்ணம்மாவை பலவகையிலும் பரிசோதித்து வந்தார். அப்படி ஒரு புதுவிதமான பரிசோதனையை அவர் தற்போது நிகழ்த்தியிருக்கிறார்.

அதன்படி கண்ணம்மாவை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு தயார் என்று அனைவர் முன்னிலையிலும் குறிப்பிட்ட பாரதி, கண்ணம்மா தன் குழந்தையோடு அந்த வீட்டை காலி பண்ணிவிட்டு தன் வீட்டிற்கு வந்து தன்னுடன் சேர்ந்து இனிமேல் வாழலாம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் என்று கூறினார்.

Also Read: ரயிலில் விழுந்து பலியான இளம் துணை நடிகை.. தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!.. என்ன நடந்தது..?

பாரதி போட்ட கண்டிஷன்

அந்த கண்டிஷன் என்னவென்று ஒரு நான்கைந்து நாட்களாக ரசிகர்கள் அனைவருமே திணறி வந்தனர். இப்போதுதான் அந்த கண்டிஷன் என்னவென்று போட்டு உடைத்திருக்கிறார் பாரதி. அதன்படி கண்ணம்மா, தான் இன்னொருவருடன் உறவு வைத்திருந்தாகவும், கண்ணம்மாவின் குழந்தை லக்‌ஷ்மி அப்படி பிறந்தவர் தான் என்றும் கண்ணம்மா ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாரதி போட்டு உடைத்த அந்த கண்டிஷன்.

இந்த கண்டிஷன் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் கண்ணம்மா கையெடுத்து ஒரே கும்பிடாக கும்பிடு போட்டுவிட்டு போய் விட்டார்.

தவறு செய்து இருந்தால் தானே ஒப்புக்கொள்வார்கள்?

அதன் பிறகு மற்றவர்கள், பாரதி இப்படித்தான் ஏதாவது செய்வார் என்று சொல்லி திட்டி விட்டு செல்கின்றனர். பாரதியோ, “நான் இவ்வளவு தூரம் மாறி இருக்கிறேன். கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டு வாழ்வதாக கூறுகிறேன். ஆனால் கண்ணம்மா செய்த தவறை ஆமாம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான் நான் எதிர்பார்த்திருந்தது, இதில் நியாயம் இல்லையா என்ன?” என்று கேட்க, பாரதியின் தம்பி அகிலனும், ‘தவறு செய்து இருந்தால் தானே ஒப்புக்கொள்வார்கள்?’ என்று வாதிட்டார்.

Also Read: அதிரடி சரவெடி!.. 2021 டி.ஆர்.பி ரேட்டிங்ல சம்பவம் செய்த ரஜினிகாந்த் - சிறுத்தை சிவாவின் அண்ணாத்த!

சீரியல் முடியப் போகிறதா?

இப்படி பாரதியின் இந்த திடீர் மனமாற்றம் கடந்த ஒரு வாரமாகவே அனைவரிடத்திலும் பாரதி மற்றும் கண்ணம்மா தம்பதியர் சேர்ந்து வாழப் போகிறார்களா? சீரியல் முடியப் போகிறதா? என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் பாரதி போட்ட இந்த கண்டிஷன், இவை அனைத்துக்கும் மிகப்பெரிய அளவிலான திடீர் திருப்பத்தை கொடுத்துள்ளது.

கடைசி வரைக்கும் அண்ணி கையால் சாப்பாடு கிடையாது!

இதனிடையே பலரும் பாரதியிடம் சண்டைபோடும் அகிலனை குறிப்பிட்டு வீரம் படத்தில் வரும் சந்தானம் பேசும் வசனத்தை சொல்லி ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது, “கடைசி வரைக்கும் உங்களுக்கு அண்ணி கையால் சாப்பாடு கிடையாது!” என்று வீரம் படத்தில் சந்தானம், அஜீத்தின் தம்பிகளுக்கு சொல்லுவார்.

அந்த வசனத்தை சொல்லி, “அண்ணியை எப்படியாவது அண்ணனுடன் சேர்த்து வைத்து வாழ வைக்க வேண்டும் என்கிற அகிலனின் நினைப்பு இப்போதைக்கு நடக்காது போல!” என்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Also Read: ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் 'பம்பர்'..  முதல்முறை கைகோர்க்கும் பிரபல BiggBoss ஹீரோயின்!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma Jan 21 2022 Episode Bharathi viral Condition

People looking for online information on Ajith Kumar, Bharathi Kannamma Jan 21 2022 Episode, Bharathi kannamma promo, Bharathi Kannamma today, Bharathi kannamma today episode, Veeram, Viswasam will find this news story useful.