"தன் சேர்ல என்னை உக்கார வெச்சு MAKE UP போட சொல்வாரு அஜித் சார்..". நெகிழ்ந்த BESANT ரவி.!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இப்ப தானே ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க.. திரும்பவும் முட்டிகிச்சா? விக்ரமன் Vs அசிம்.. bigg boss 6 tamil

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நாளை (டிசம்பர் 24) நடைபெற உள்ளது.

அதே போல மற்றொரு முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆவதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், Behindwoods TV சேனலில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இதில், பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அஜித் மற்றும் விஜய் ஆகியோர் குறித்து பல சுவாரஸ்ய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதில் பெசன்ட் ரவி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் குறித்து பேசிக் கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பெசன்ட் ரவி, "ரெண்டு பேருக்கும் உள்ள அவ்ளோ புரிதல் இருக்கு. ஷாலு மேடமும் சங்கீதாவும் பயங்கர க்ளோஸ். வெளிய இருந்து பார்க்கும் போது அப்படியே போயிட்டுருக்கு. ரசிகர்கள் ஒரு இமேஜ கொண்டு வந்துட்டாங்க" என தெரிவித்தார்.

அதே போல, நடிகர் விஜய்யுடன் நடித்த மறக்க முடியாத திரைப்பட காட்சி அல்லது வசனம் பற்றி பேசிய பெசன்ட் ரவி, போக்கிரி படத்தை குறிப்பிட்டு, "யார்றா இங்க தமிழ்ன்னு கூப்பிட்டு சட்டையை புடிச்சு நான் இழுத்துட்டு போவேன். அதுக்கு அப்புறம் அவரு துப்பாக்கியை எடுத்து சுடுற சீன் சூப்பரா இருக்கும்" என பெசன்ட் ரவி தெரிவித்தார்.

அதே போல நடிகர் அஜித் குறித்து பேசி இருந்த பெசன்ட் ரவி, "நான் அஜித் சார்ன்னு கூப்பிட்டுட்டு இருந்தேன். அஜித்ன்னு கூப்பிட சொல்லுவாரு. இவ்ளோ வளர்ந்தும் அஜித்ன்னு கூப்பிட சொல்லுவாரு. அது எல்லாம் எங்களுக்கு கெடச்ச கிஃப்ட்ன்னு தான் சொல்லணும்.

ஒரு தடவ அஜித் சார் கேரவனும், என் கேரவனும் பக்கத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்துது. அப்போ என் கேரவன்ல கோளாறு ஏற்பட்டு கரெண்ட் எல்லாம் போய்டுச்சு. அவர் கேரவன்ல கரெண்ட் இருந்துச்சு. என்னை அவரு கேரவன்ல கூப்பிட்டு அவரு சேர்ல உக்கார வெச்சு ரவிக்கு அங்கே மேக்கப் போடுங்கன்னு சொல்லுவாரு. அந்த டைம்ல டீ குடுத்தாரு. மேக்கப் போட்டு நான் குடிக்குறதுக்குள்ள டீ ஆறிடுச்சு. அப்போ இன்னொரு டீ போட்டு குடுத்தாரு. அந்த அளவுக்கு ஒரு தங்கம். ரெண்டும் (அஜித், விஜய்) தங்கம் தான்" என மனம் நெகிழ்ந்து போய் பெர்சன்ட் ரவி குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "தல அஜித்".. துணிவு ஸ்பாட்டில் மகாநதி சங்கரை பார்த்து அஜித் சொன்ன விஷயம்.. Exclusive!!

"தன் சேர்ல என்னை உக்கார வெச்சு MAKE UP போட சொல்வாரு அஜித் சார்..". நெகிழ்ந்த BESANT ரவி.!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Besant Ravi about ajith kumar gesture in shooting spot

People looking for online information on Ajith Kumar, Besant Ravi, Mahanadi Shankar, Vijay will find this news story useful.