"கண்ணம்மா நல்லவ.. தப்பு என்மேல தான்..".. குற்ற உணர்ச்சியில் குமுறி அழுத பாரதி.. ‘ஷாக்’ ஆன வெண்பா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பல வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இதில் மருத்துவர் பாரதியை, அவரை ஒருதலையாய் காதலிக்கும் மருத்துவர் வெண்பா மூளை சலவை செய்தும், இன்னும் பல தகிடுதத்தங்கள் செய்து பாரதி - கண்ணம்மா இருவரையும் பிரித்தும் வைத்திருக்கிறார். பாரதியும் கண்ணம்மாவின் மீதான சந்தேகத்தால் கண்ணம்மாவை வெறுத்து ஒதுங்கி வாழ்கிறார். இதனிடையே இவர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும் இன்னொரு குழந்தை பாரதியிடமும் வளர்கிறார்கள்.

ஆனால் பாரதி, கண்ணம்மா இருவருக்குமே இந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் என்பது தெரியாது. பாரதியை பொருத்தவரை ஹேமா, தான் வளர்த்து வரும் குழந்தை என நினைத்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவை பொருத்தவரை லக்ஷ்மி மட்டும்தான் தான் பெற்ற குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பாரதி, கண்ணம்மா இருவரையும் மற்றும் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியையும் தவிர இந்த விஷயம் பாரதியின் வீட்டில் அனைவருக்குமே தெரியும். இதனிடையே தற்போது கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பற்றிய விபரம் தெரியவந்தது. இதனை அடுத்து ஹேமா, பாரதியின் வளர்ப்பு குழந்தைதான் என்றும், வெண்பாவை பாரதி திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கண்ணம்மாவுக்கு தெரிய வந்து விட்டது. இதனால் ஒருவேளை ஹேமா தன்னுடைய குழந்தையாக இருப்பாளோ என்கிற சந்தேகமும் கண்ணம்மாவுக்கு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் தான் ஒரு பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், அந்த ப்ரோமோவில்,  “கண்ணம்மா ஏன் நல்லவளாக இருக்க கூடாது? என் தரப்பிலும் தவறு இருக்கலாம் அல்லவா? இத்தனை வருஷமாக நான் நம்பிக்கிட்டு இருக்கிற விஷயம் கூட பொய்யாக இருக்கலாம் அல்லவா? இதன் பிறகு வரக்கூடிய வருஷங்களிலாவது கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழக்கூடாதா என்று என் மனது கிடந்து தவிக்கிறது” என்றெல்லாம் பாரதி பேசியிருக்கிறார். இதுதான் பாரதி கண்ணம்மா ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணியிருக்கிற சமீபத்திய ப்ரோமோ. ‌

பொதுவாகவே பாரதி கண்ணம்மா சீரியல் பொருத்தவரை, என்னதான் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு மிக தீவிரமான ஆதரவை ஒருபுறம் காட்டி வந்தாலும், இன்னொரு புறம், “பாரதியும் கண்ணம்மாவும் இப்படி முரண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்? எப்போதுதான் ஒன்றுசேர்வார்கள்?” என்கிற எதிர்பார்ப்பும், “அதை கொஞ்சம் சீக்கிரம் நடத்தி வையுங்கள்” என்கிற ஆவலும் தான் அவர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில்தான் பாரதி இப்படி கண்ணம்மாவை பற்றி நல்ல விதமாக பேசி, தான் தவறு செய்து விட்டதாகவும் கூறி, குற்ற உணர்ச்சியில் குமுறி குமுறி அழும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், “எத்தனை வருடங்கள் கழித்து இந்த பொன்னான வார்த்தைகளை பாரதி வாயால் கேட்கிறோம். இதை கனவு என்றெல்லாம் சொல்லி காட்சியை மாற்றி விட மாட்டீர்களே?” என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

சரி.. அப்படி என்ன இந்த காட்சியில் நடந்திருக்கிறது? என்று சொன்னால், மருத்துவமனையில் பாரதியிடம் ஒரு பெண் பேசுகிறார். அந்த காட்சியில் அப்பெண், “எங்க அண்ணன் மிகவும் தங்கமானவர். எங்க அண்ணி மீது எப்போது அவருக்கு சந்தேக புத்தி வந்ததோ... அன்னையிலிருந்து அவர் வாழ்க்கையே நாசமாகிவிட்டது...” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதைக் கேட்கும் பாரதி ஒரு கணம் உருக்கமாக அதைப்பற்றி சிந்திக்கிறார். அந்தப் பெண் சொல்வது தனக்கு சொல்வது போலவே இருப்பதாக அவருக்கு தோன்றுவதாக தெரிகிறது.

உடனே குற்ற உணர்ச்சியில் அழத் தொடங்கிய பாரதி,  மேற்கூறியபடி, “கண்ணம்மா மிகவும் நல்லவளோ? அவளுடன் மிக நீண்ட வருடமாக வாழாமல் பிரிந்து, தான் தவறு செய்து கொண்டிருக்கிறோமோ?” என்றெல்லாம் புலம்பத் தொடங்கிவிட்டார். இதை கண்ட வெண்பா அதிர்ச்சியாகவும் டென்ஷன் ஆகவும் ரியாக்ஷன் கொடுக்கிறார். 

மேலும் வெண்பா, ‘சிட்டி’ இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டதே? என்பது போல, “என்ன இவன் இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டான்? .. இதை இப்படியே விட்டுவிட்டால் இவனை கையில் பிடிக்க முடியாது.. இவன் ஒருவேளை கண்ணம்மாவை நல்லவள் என்று நினைத்து விட்டால் அவ்வளவுதான்.. இவனைபிறகு தடுக்க முடியாது” என்றெல்லாம் மனதுக்குள் யோசிக்கிறார்.

ஆனால் அதற்குள் பாரதி தன்னுடைய வீட்டுக்கு வந்து அப்பா, அம்மா, தன்னுடைய தம்பி அகிலன் ஆகியோரிடம் இதே விஷயத்தை பகிர்ந்து கொள்கிறார். “இனி வரும் வாழ்க்கையையாவது கண்ணம்மாவுடன் வாழவேண்டும்!” என்று அவர் கூறுவதை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பாரதியா இப்படியெல்லாம் பேசுவது? என்றெல்லாம் நெகிழ்ந்து உருகி கண்கலங்கி பார்க்கின்றனர்.

பாரதியும் அழுதுகொண்டே பேசுகிறார். “அப்படியே கனவாகவே வைத்தாலும் இவ்வளவு நீண்ட கனவு பொதுவாக சீரியலில் வைக்க மாட்டார்கள். எனவே இது உண்மையாகவே நடக்கிற சம்பவமாக தான் இருக்கும்” என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

ஒருவேளை இது நடந்தால், அதாவது பாரதி கண்ணம்மா மீண்டும் ஒன்று சேர்ந்தால், இந்த சீரியலின் தொடக்கத்தில் இருந்தது போலவே பாரதிக்கும் கண்ணம்மாவுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாகும் என்றும் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

விஜய் டிவி சீரியலை பொருத்தவரை ஒரு வாரத்துக்கான ப்ரோமோவை போடுவார்கள். அந்த ஒரு வாரத்துக்குள் அந்த ப்ரோமோவில் வரும் நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Barathi feel guilty realizes his mistake Barathi kannamma promo

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Serial today episode, Trending, TVSerial, VijayTelevision, Vijaytv will find this news story useful.