உள்ள 'அழுகுறேன்' வெளிய சிரிக்குறேன்... மீம் போட்டு 'தாளிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டு வாரம் ஜெயிலுக்கு விடுமுறை அளித்த பிக்பாஸ் நேற்று மீண்டும் அதை கையிலெடுத்து விட்டார். மணிக்கூண்டு டாஸ்க்கை வைத்து அவர் ரூல்ஸ் சொன்னது தான் இதில் ஹைலைட். பாலாஜி, ரம்யா பாண்டியன், சுசித்ரா ஆகிய மூவரில் இருந்து இரண்டு பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்க, அனைவரும் கலந்து ஆலோசித்தனர்.

பாலாஜி, சுசித்ரா இருவரையும் அவர்கள் சொல்ல பாலாஜி அதெல்லாம் முடியாது என அடம்பிடித்தார். பிக்பாஸ் அப்படி எதுவும் சொல்லவில்லை என்றும் வாதாடினார். பிறகு மறுபடியும் ஆலோசனை நடந்தது. ரம்யா மீது எந்த தவறும் இல்லை என முடிவு செய்த சக போட்டியாளர்கள் அந்த ரெண்டு போரையும் ஜெயிலுக்கு போக சொல்லுப்பா என்பது போல ஆஜீத்திடம் கூறினர். மீண்டும் பாலாஜியிடம் சென்ற அஜீத் (அவர்தான் கேப்டன்) காரணங்களை அடுக்கி பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்பினார்.

தான் ஜெயிலுக்கு செல்வதை அதுவும் சுச்சியுடன் செல்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல. ஒருவேளை சுச்சிக்கு பதிலாக ரம்யா சென்றிருந்தால் பாலாஜி இவ்வளவு கோபப்பட்டு இருப்பாரா? என்பதும் தெரியவில்லை. என்ன எப்படி அனுப்பலாம் என்பது போலவே அவரது நடவடிக்கைகள் இருந்தன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சென்னை 28 படத்தில் ஜெய் பாத்ரூம் உள்ளே சென்று அழுகும் சீனை வைத்து மீம் போட்டு, அவரை கிண்டலடித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss went Jail with Suchitra, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.