BREAKING: இயக்குனர் பாலா+ நடிகர் சூர்யா இணையும் புதிய படத்தின் பக்கா மாஸ் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் நந்தா!.

இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். தல அஜித்தை வைத்து எழுதப்பட்டு, முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி, படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் சில தயாரிப்பு காரணங்களால் நந்தா படப்பிடிப்பு நின்று போக, பின்னர் அஜித்திற்கு பதில் சூர்யா நடிப்பில் நந்தா படம் துவங்கியது.

பின்னர் சூர்யா - விக்ரமை வைத்து இயக்குனர் பாலா எடுத்த பிதாமகன் திரைப்படம் சூர்யாவின் அடுத்த பரிமாணத்தை காட்டியது. பின்னர் பாலா தயாரிப்பில் இயக்குனர் ரெட் சிங்கம்புலி இயக்கத்தில் மாயாவி படத்தில் நடித்தார் சூர்யா.

கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. 

இந்நிலையில் பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பாலாவின் பரதேசி பட நாயகன் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags : Bala, Suriya

தொடர்புடைய இணைப்புகள்

Bala suriya 2d entertainment atharva movie update

People looking for online information on Bala, Suriya will find this news story useful.