கோபியின் சூழ்ச்சிக்கு ஆளான இனியா.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்தேறும் அடுத்த பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.

Advertising
>
Advertising

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தெறி ஸ்டைலில் வெளியான புதிய போஸ்டர்!

இந்த மெகாதொடருக்கு  அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா.

பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். 

பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. விவாகரத்து செய்ததோடு ராதிகாவை திருமணம் செய்தும் கொண்டார் கோபி.

இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது.

கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் பாக்கியலக்ஷ்மி இருக்கும் வீட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள வீட்டுக்கு குடியேறியுள்ளார் கோபி.

கடந்த எபிசோடில் குழந்தை இனியா சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாக தகவல்கள் பாக்யா & கோபிக்கு நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. உடனடியாக பள்ளிக்கு வரும் கோபி, இனியா குறித்து ஆசிரியர்களிடம் விசாரிக்கிறார். இதற்கிடையில் பாக்யாவும் பள்ளிக்கு வருகிறார்.

இச்சூழலில் இனியா இருக்கும் வகுப்பறைக்கு செல்லும் கோபி, இனியாவிடம் பேசுகிறார். வாகன விபத்து குறித்து இனியாவிடம் கோபி விசாரிக்கிறார். பின்னர் பாக்யாவுக்கு தெரியாமல் இனியாவை தனது காரில் அழைத்து கோபி சென்று விடுகிறார். இதை கவனித்த பாக்யா கோபியின் காரை துரத்தி ஓடுகிறார்.

பின்னர் கோபி வீட்டுக்கு செல்லும் பாக்கியலட்சுமி, இனியாவை, "அம்மா வந்திருக்கேன் உன்னை பாக்கனும்" என அழைக்கிறார். பாக்யாவை பார்க்க எழும்பும்  இனியாவை தடுக்கிறார் கோபி.

இனியாவை பாக்கியலட்சுமி பார்க்க விடாமல் தடுக்க ரூமின் கதவை கோபி மூடுகிறார். "என் பொண்ணு எங்க இருக்காளோ அங்கே நான் வருவேன்" என பாக்கியலட்சுமி கோபியை நோக்கி கோபமாக கூறுகிறார். "வெட்கம் மானம் சூடு சொரணை எதாவது இருந்தால் கெளம்புறியா? இல்ல கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளவா?" என கோபி பேசுவது போல ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | Bharathi Kannamma : "ஒரு DNA டெஸ்ட் எடுக்க 10 வருஷமா?".. RESULT -க்கு முன் பாரதியை கழுவி ஊற்றிய டாக்டர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Serial Today Episode Video

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Baakiyalakshmi Serial Today Episode, Vijay Television will find this news story useful.