"நமக்குள்ள என்ன பிரச்சனை?.." JUDGE முன்னாடி வெள்ளந்தியாக கேட்ட பாக்கியலட்சுமி.. வசமா சிக்குன கோபி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று, 'பாக்கியலட்சுமி'.

Advertising
>
Advertising

"என் புருஷன் பண்ணது தப்பு.." கண்ணில் நீர் வழிய நிற்கும் குஷ்பு.. வெளியான புதிய சீரியல் 'ப்ரோமோ'

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் கோபி எடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமியிடம் இருந்து வக்கீல் நோட்டீஸில் கையெழுத்தும் வாங்கி விட்டார் கோபி. ஆனால், தான் விவாகரத்து பாத்திரத்தில் தான் கையெழுத்திட்டோம் என்ற விவரம், அப்பாவி மனைவியான பாக்கியலட்சுமிக்கு தெரியாது.

கோபி மனதில் கேள்விகள்

தன்னை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு கோபி அழைக்கவே, எதுவும் தெரியாமல், கணவர் கூறும் அனைத்து விஷயத்திற்கும் தலையாட்டிக் கொண்டே சரி என பாக்கியலட்சுமி சொல்கிறார். கோபிக்கோ ஒரு பக்கம் மனைவியின் முகமும், இன்னொரு பக்கம் ராதிகாவின் வார்த்தைகளும் ஓடி கொண்டிருக்க, பல கேள்விகள் கோபி மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

எனக்கு சம்மதம் தான்

அதே போல ஒரு ப்ரோமோவில், மனைவி பாக்கியலட்சுமியை, கோபி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது, இருவரையும் பார்த்து, "உங்களுக்கு சம்மதம் தானா?" என நீதிபதி கேட்கிறார். இதற்கு தடுமாற்றத்துடன் கோபி 'ஆம்' என சொல்ல, பாக்யலட்சுமியோ எதுவும் தெரியாமல், "இவரு எல்லாத்தையும் சொன்னாருங்க. எனக்கு சம்மதம் தான்" என வெள்ளந்தியாக கூறுகிறார்.

குழப்பத்தில் பாக்கியலட்சுமி

தொடர்ந்து நீதிபதியும், திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது என கேட்க, பாக்கியலட்சுமி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என கூறுகிறார். இதற்கு, "இத்தனை வருஷம் கழிந்து என்ன பிரச்சனை?. ஏன் இந்த முடிவுக்கு வந்தீங்க?" என நீதிபதி கேட்கிறார். இதனால், கோபி மேலும் பதற்றம் அடைய, பாக்கியலட்சுமியோ ஒன்றும் புரியாமல், என்ன பிரச்சனை என குழப்பத்தில் நிற்கிறார்.

விவாகரத்து பண்ண வந்தவங்களா?

மேலும் ஒரு ப்ரோமோவில், கோர்ட்டில் நடக்கும் மற்றொரு விவாகரத்து வழக்கினை கண்டு, நம்மிடமும் இது போல தான் கேட்பார்களா என கோபி அச்சம் கொள்கிறார். இப்படியே விட்டுச் சென்று விடலாமா என்றும் நினைக்கிறார். பிறகு, பாக்கியலட்சுமியை வெளியே அழைத்துச் சென்ற பிறகு, அங்கிருக்கும் வக்கீல் ஒருவரிடம் பாக்கியலட்சுமி, "உள்ளே இவ்ளோ பேர் இருக்காங்களே.. எல்லாரும் விவாகரத்து பண்ண தான் வந்திருக்காங்களா?." என கேட்கிறார்.

அதற்கு வக்கீலோ, "ஆமாம் மா. குடும்ப பிரச்சனை தான் இப்போ பெரிய பிரச்சனையா இருக்கு" என விரக்தியுடன் கூறுகிறார். இதற்கு பாக்கியலட்சுமியோ, "ஏதாவது பேசி சரி பண்ணி, சேர்ந்து வாழ முடியாதா சார்?" என கேட்கிறார்.

மாறிய கோபி முகம்

இதனைக் கேட்டதும் கோபி முகம் மாற, மற்றவர்கள் விவாகரத்து பற்றி இப்படி யோசிக்கும் பாக்கியலட்சுமி, நாமும் விவாகரத்து செய்யத் தான் வந்திருக்கிறோம் என தெரிந்தால், எப்படி எடுத்துக் கொள்வார் என்பது போல கோபி அச்சம் கொள்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் இந்த வாரம், விவாகரத்து விவகாரம் பரபரப்பாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ப்ரோமோக்களும் பரபரப்பை இன்னும் எகிற வைக்கும் வகையில் உள்ளது.

பூவே உனக்காக சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்.. ஷாக் ஆன ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi serial new promos in court gone viral

People looking for online information on Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Baakiyalakshmi Serial Today Episode, Vijay tv will find this news story useful.