பாக்கியலட்சுமி கொடுத்த என்ட்ரி.. ஷாக் ஆகி ஓடி ஒளிந்த கோபி.. ரணகளம்.. இதோட கோபி கத ஓவர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில தினங்களாகவே, மிகப் பெரிய பேசு பொருளாகியுள்ள சீரியல் என்றால் அது 'பாக்கியலட்சுமி' தான்.

Advertising
>
Advertising

சூ* வெப்பாங்க, போடா *.. அனிதாவா இப்படி பேசுறது? அக்னி குண்டமான Bigg Boss Ultimate வீடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரம் தான் பாக்கியலட்சுமி.

இவரின் கணவரான கோபி, வெள்ளந்தியான மனைவி பாக்கியலட்சுமியை விட்டு விட்டு, ராதிகாவை திருமணம் செய்யும் முடிவை ஏற்கனவே எடுத்து விட்டார்.

ரசிகர்கள் ஷாக்

இதனை மையப்படுத்தி, #SaveBaakiyalakshmi என்ற ஹேஸ்டேக்குகள், சமீபத்தில் அதிகம் டிரெண்ட் ஆகியிருந்தது. முன்னதாக, பாக்கியலட்சுமியை ஏமாற்றி, விவாகரத்து வாங்க முயற்சி செய்த கோபி, அதன் பிறகு ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்றும் திட்டம் போட்டிருந்தார். இதற்காக, கோர்ட்டில் மனைவியை அழைத்துக் கொண்டு கோபி செல்வது போன்ற காட்சிகள், பாக்கியலட்சுமிக்கு துரோகம் நடக்க போகிறதா என ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

போராடும் பாக்கியலட்சுமி

இன்னொரு பக்கம், கோபியின் தந்தைக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட, வீட்டின் செலவு கணக்குகளை, நேர்த்தியாக பார்த்து, தேவைக்கேற்ற வழியில் பாக்கியலட்சுமி செலவழித்து வந்தார். கணவர், மகன் என யாரும் உதவ முன் வராத காரணத்தினால், தனியாளாக அனைத்தையும் கவனித்துக் கொண்டார் பாக்கியலட்சுமி.

'ஹாய் ராதிகா'

இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்த வாரத்தின் ப்ரோமோ, ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் எகிற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ராதிகா வீட்டில் கோபி பேசிக் கொண்டிருந்த சமயத்தில், "ஹாய் ராதிகா" என கூறிக் கொண்டே பாக்கியலட்சுமி என்ட்ரி கொடுக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத கோபி, என்ன செய்வதென்று தெரியாமல் நடுக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். உடனடியாக, அறை ஒன்றில் சென்று ஒளிந்து கொள்ள, ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் பேச்சைத் தொடங்குகிறார்கள்.

மாறிய கோபி முகம்

"நான் என் ஃபிரெண்ட் பத்தி சொன்னேன்ல டீச்சர். எனக்கும் அவருக்கு ஒரு 'Relationship' இருக்கு. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்" என பாக்கியலட்சுமியிடம், ராதிகா தெரிவிக்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டே இருக்கும் கோபியின் முகமே மாறிப் போகிறது. ஏனென்றால், பாக்கியலட்சுமியின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கு தெரியாது.

வாழ்த்தும் பாக்கியலட்சுமி

மேலும், தனது கணவரை பற்றித் தான் ராதிகா பேசுகிறார் என்பது பாக்கியலட்சுமிக்கு தெரியாது. தொடர்ந்து பேசும் பாக்கியலட்சுமி, "ரொம்ப நல்ல விஷயம். நான் மனசார சொல்றேன். உங்கள கல்யாணம் பண்ணிக்க போறவரு, உங்கள நல்லா வெச்சுப்பாரு" என வாழ்த்துகிறார். தொடர்ந்து, கல்யாணத்துக்கு நிச்சயம் வர வேண்டும் என ராதிகாவும் சொல்ல, வருவதாக உறுதி அளிக்கிறார் பாக்கியலட்சுமி.

வலுக்கும் சந்தேகம்

தொடர்ந்து, பாக்கியலட்சுமி மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி ஆகியோர் ராதிகா வீட்டிலிருந்து கிளம்ப, சாலை அருகே கோபியின் கார் நிற்பதை, இருவரும் பார்க்கின்றனர். இதனால், ராதிகா தெரிவித்த ஃபிரெண்ட் கோபி தான் என இருவருக்கும் சந்தேகம் வர, "அந்த ஃபிரெண்ட் ஒரு வேளை நம்ம சாரா இருக்குமோ?. வாக்கா, வீட்டுக்குள்ள போய் பாத்துட்டு வரலாம்" என பாக்யலட்சுமியை வீடு வேலை செய்யும் பெண்மணி அழைக்கிறார்.

அதிர்ச்சி கலந்து முகத்துடன் அவரும் நிற்க, அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதை வாரத்தின் தொடக்கத்திலேயே சொல்லி, ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களின் கவனத்தையும், பாக்கியலட்சுமி பக்கம் திருப்பியுள்ளனர்.

"இவங்க கிட்ட வேல பாக்காதீங்க.." Ex பாரதி கண்ணம்மா நடிகை பரபரப்பு போஸ்ட்.. "யார சொல்றாங்க"

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi serial gopi shocked after wife entry march 14 to 19 2022

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television, Vijay tv serial will find this news story useful.