தடையை தகர்த்து அமிர்தாவுக்கு தாலி கட்டிய எழில்.. தனி ஆளா நடத்தி வெச்ச பாக்கியலட்சுமி.! BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார். கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Anikha Surendran : அடுத்தடுத்து கலக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ஒரே மாதத்தில் 2 படம் ரிலீஸ்..!

இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார்.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வரும் எழில் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கோபியிடம் இருந்து வீட்டை பணம் கொடுத்து வாங்கி பாக்கியாவிடம் கொடுக்க முற்படுகிறார். அதற்கு தான் எடுக்க போகும் சினிமாவை நம்பி இருந்தார். ஆனால் எழிலின் தயாரிப்பாளரின் மகள் எழில் மீது ஆசைப்பட, எழிலோ, தான் காதலிக்கும் அமிர்தாவையே திருமணம் செய்யவுள்ளதாக கூறுகிறார். இதனால் அவரது பட  தயாரிப்பாளர் கோபப்பட, படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து எழிலின் பாட்டியும் அண்ணனும் அமிர்தாவை விட்டுவிட்டு, தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியை கல்யாணம் பண்ணச் சொல்லி வற்புறுத்தியதுடன், அந்த தயாரிப்பாளரிடம் எழிலை வர்ஷினிக்கே கல்யாணம் பண்ணி தருவதாக சொல்லி வாக்கு கொடுத்துவிட்டு வீட்டை கோபியிடம் இருந்து வாங்குவதற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டுவந்துவிட்டனர். இந்த அழுத்தம் தாங்காமல், வீட்டில் இருக்கும் அனைவருக்காகவும், எழில் அமிர்தாவிடம் சென்று காதலை பிரேக் அப் பண்ணிவிட்டார். இதன் தொடர்ச்சியாக எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால் தன் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாகவே எழில் இந்த திருமணத்தை பண்ண மனமின்றி சம்மதித்தார்.

இந்நிலையில் எழிலுக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஏதோ பிரச்சனை என நினைத்து அங்கு கைக்குழந்தையுடன் வந்த அமிர்தா, அவருக்கு திருமணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்து உடைந்து அழுதார். அப்போது  நிலைமையை எடுத்துச் சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார் எழில். இதைப் பார்த்த பாக்கியாவுக்கு அப்போதுதான் இது தன் மாமியாரின் நிர்ப்பந்தம் என்றும், வர்ஷினி மற்றும் வர்ஷினியின் தந்தையது சூழ்ச்சி என்றும் தெரியவருகிறது. இதனால் தன் மாமியார், கோபி, மாமனார் என அனைவரையும் எதிர்த்து திருமணத்தை தடுத்து எழிலுக்கு அமிர்தாவையே திருமணம் செய்துவைத்துள்ளார் பாக்யா. 

பின்னர் அழுதபடி திருமணம் செய்த எழி- அமிர்தா, பாக்கியலட்சுமியின் காலில் விழுந்து ஆசி பெற்று நன்றி கூறினார்கள்.

Also Read | “காஸிப் பேசுறது யாரு?” - அசிம் பேர சொன்ன விக்ரமன்.. பதிலுக்கு அசிம் கொடுத்த பரபரப்பு கமெண்ட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi serial episode Ezhil married amirtha

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi prmo, Baakiyalakshmi Serial Today Episode will find this news story useful.