பாக்கியா தாலி எடுத்து குடுப்பாளா??. ராதிகாவின் அலப்பறையால் விழி பிதுங்கிய கோபி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாக்கியலட்சுமி' தொடர் மீது தான் தற்போது ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்கள் பார்வையும் உள்ளது.

Advertising
>
Advertising

"அப்படி சொல்றவங்க மூஞ்சிலயே அடிக்கணும்.." பிரபல சீரியல் நடிகர் ஆவேச போஸ்ட்.. பின்னணி என்ன??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் நாயகன் கோபி, மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்யத் தயாராகியுள்ளார்.

இதற்கான முடிவை எடுத்துவிட்டு கோபி, பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்யும் திட்டங்களை வகுத்திருந்ததும் அதிக பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது.

ஒளிந்து கொள்ளும் கோபி

கணவர் விவாகரத்து செய்ய போகிறார் என்பது கூட தெரியாமல், வெள்ளந்தியாக விவாகரத்து பாத்திரத்தில் பாக்கியலட்சுமி கையெழுத்து போட்டதெல்லாம் தனிக்கதை. இதனைத் தொடர்ந்து, ராதிகா வீட்டில் கோபி இருந்த சமயத்தில், பாக்கியலட்சுமி என்ட்ரி கொடுக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத கோபி, என்ன செய்வதென்று தெரியாமல் நடுக்கத்தில் நிற்க, அறை ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறார்.

கோபியின் ரியாக்ஷனை பாக்கணுமே

கோபியுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி, ராதிகா பாக்கியலட்சுமியும் விவரிக்க, திரும்பி வாழ்த்தும் சொல்கிறார் பாக்கியலட்சுமி. இதனிடையே, கோபியின் ரியாக்ஷனே மாறி போகிறது. ஏனென்றால், பாக்கியலட்சுமியின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கு தெரியாது. மேலும், தனது கணவரை பற்றித் தான் ராதிகா பேசுகிறார் என்பதும் பாக்கியலட்சுமிக்கு தெரியாது.

சந்தேகம்

பிறகு, பாக்கியலட்சுமி மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி ஆகியோர் ராதிகா வீட்டிலிருந்து கிளம்ப, சாலை அருகே கோபியின் கார் நிற்பதை, இருவரும் பார்க்கின்றனர். இதனால், ராதிகா தெரிவித்த நபர் கோபி தான் என இருவருக்கும் சந்தேகம் வர, மீண்டும் ராதிகாவின் வீட்டிற்குள் சென்று பார்க்கலாம் என இருவரும் முடிவும் செய்கின்றனர்.

இது தொடர்பான ப்ரோமோக்கள் வெளியாகியிருந்த நிலையில், கோபி நிலை என்னவாக போகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவிதித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள மற்றொரு ப்ரோமோ, கோபியின் நிலைமையை இன்னும் பரிதாபம் ஆக்கியுள்ளது.

ஏமாற்றும் கோபி

பாக்கியலட்சுமி வந்ததும் ரூமுக்குள் சென்ற கோபியை அழைக்க வேண்டி, ராதிகா உள்ளே வருகிறார். ஆனால், வெளியே சென்றால் வாழ்க்கை தண்டவாளத்தில் ஏறி விடும் என்பதால், யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருப்பது போல, கோபி பாவனை செய்ய, சிறிது நேரம் காத்து நிற்கும் ராதிகா, வெளியே சென்று விடுகிறார். உடன் நிம்மதி பெருமூச்சு விடும் கோபி, வெளியே ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

கண்டிப்பா வருவேன்

அப்போது, "அவருக்கு டைவர்ஸ் கிடைச்சதும் சின்னதா கல்யாணத்துக்கு அம்மா ஏற்பாடு பண்ணுவாங்க. அப்ப நீங்க கண்டிப்பா வரணும்" என பாக்கியலட்சுமியிடம் ராதிகா தெரிவிக்கிறார். இதற்கு பதில் சொன்ன பாக்கியலட்சுமி, "உங்க கல்யாணத்துக்கு நான் வரமாட்டேனா?. கண்டிப்பா வருவேன்" என கூறுகிறார்.

என்னா ஆக்டிங்

இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் கோபி, "பாக்கியா தானே.. வருவா வருவா, அவளே வருவா. தாலி எடுத்து குடுப்பா. உன் கல்யாணத்துக்கு அவளே சமைப்பா. உனக்கு சோறு ஊட்டுவா. விருந்து வைப்பா" ஏன் தன்னுடைய அவஸ்தைக்கு மத்தியிலும் நக்கலாக குறிப்பிடுகிறார்.

மேலும், "ஏன்டி, எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு?. ஏன்டி இப்டி படுத்துறீங்க?" என தன்னுடைய நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்து, அல்லோலப்படுகிறார் கோபி. இறுதியாக, தன்னுடைய கடின நிலைக்கு மத்தியிலும், மிகவும் நகைச்சுவையாக செய்யும் கோபியின் ரியாக்ஷன்கள் தான், தற்போது பாக்கியலட்சுமி ரசிகர்களின் ஹைலைட் விஷயமாக மாறியுள்ளது.

BB Ultimate : "சிம்புவுக்கு பிக்பாஸ் பழக்கம் இல்ல.. அவருக்கு புரியாது.." அனிதா பரபரப்பு கருத்து.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi new promo about radhika gopi marriage

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Gopi, Radhika, Vijay tv will find this news story useful.