BAAKIYALAKSHMI: "பொண்டாட்டி ராதிகாவா.?" அனைவர் முன்னிலும் கோபியை வெளுக்கும் பாக்யா.. பரபரப்பு EPISODE.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் சிறந்த தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமியில், ஒவ்வொரு எபிசோடும் தாறுமாறாக தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

மனைவி பாக்கியாவை ஒரு புறம் ஏமாற்றி விட்டு, மறுபுறம் மனைவியின் தோழியான ராதிகாவை அடைவதற்காக ஏராளமான நாடகங்களை நடத்தி வந்த கோபியின் தில்லாலங்கடி வேலைகள், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது.

தனது தோழியின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கு தெரிய வரவே, அவர் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.

பாக்கியாவுக்கு தெரிய வந்த உண்மை

தொடர்ந்து, கோபியை தன்னிடம் இருந்து ராதிகா விலக்க ஆரம்பிக்க, கோபி ராதிகா தான் வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், ராதிகாவின் கணவரும் கோபி வீட்டிற்கு வந்து பிரச்சனைகளை உண்டு பண்ண, என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பி போகின்றனர் கோபியின் குடும்பத்தினர்.

அப்படியே இருக்கும் போது தான், விபத்து ஒன்றில் சிக்கி விடுகிறார் கோபி. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, அவரைக் காண பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். கோபியின் மனைவியின் இடத்தில் ராதிகா கையெழுத்து போடுவதைக் கண்ட பாக்கியா, ஒட்டு மொத்தமாக நிலைகுலைந்து போகிறார். பின்னர், ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டே கோபி பேசுவதைக் கேட்டு ஏமாற்றத்தில் கண்ணீரும் வடிக்கிறார் பாக்கியா.

உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கும் பாக்கியா, இனிமேல் என்ன முடிவு எடுப்பார் என்ற விறுவிறுப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டது.

"கோபி மனைவி பாக்கியா இல்ல.."

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், பரபரப்பான காட்சி ஒன்று கோபியின் வீட்டில் அரங்கேறுகிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் கோபி, பாக்கியா மருத்துவமனைக்கு தன்னை வந்து ஏன் பார்க்கவில்லை என்பது பற்றி கேட்கிறார். கோபியைக் காண மருத்துவமனைக்கு சென்ற பாக்கியா, அவரை பார்க்கவில்லை என்பதை அறிந்த குடும்பத்தினரும் புரியாமல் குழம்பி போகிறார்கள்.

தொடர்ந்து, கோபியின் மருத்துவ பில்லை மனைவி செலுத்தியதாக மருத்துவமனையில் கூறியது பற்றி அவர்கள் பாக்கியாவிடம் கேட்க, "வைஃப்'ன்னு சொன்னாங்க. பாக்கியலட்சுமி'ன்னு சொன்னாங்களா?" என கோபத்தில் கேட்கிறார் பாக்கியா. கோபியின் மனைவி பாக்கியா தானே என அனைவரும் சிந்திக்க, மருத்துவமனையில் பணம் கட்டியது, கோபியின் மனைவி என அனைவரும் சொன்னது ராதிகாவை தான் என பாக்கியா போட்டு உடைக்க, பேச்சு மூச்சு இல்லாமல் உறைந்து போய் நிற்கிறார் கோபியின் தாயார்.

பல நாட்கள் கோபி போட்டு வந்த நாடகம், தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தெரிவது போல காட்சிகள் வெளியாகி உள்ளதால், அடுத்தடுத்து பாக்கியலட்சுமி தொடரில் நடக்க போகும் திருப்புமுனைகள் எப்படி இருக்கும் என்பது தான், ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi loses her cool infront of gopi and family

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Gopi, Radhika will find this news story useful.