BAAKIYALAKSHMI: “கண்ணம்மா BE LIKE.. அக்கா இனி‌ நம்ம 2 பேரும் ஒரு செட்டு” - தரமான சம்பவம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல பாலிவுட் நடிகையுடன் விக்கி - நயன்.. இணையத்தில் Trend ஆகும் ஃபோட்டோ!!

ஒரு இல்லத்தரசியின் கதை என்று பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கப்பட்டது முதலேயே இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் வாழும் ஒரு பெண் அந்த குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறாள். அமைதியுடனும் அன்புடனும் அனைவரையும் அரவணைத்து அந்த குடும்பத்தை நடத்தி வரும் அந்த பெண்ணுக்கு ஒரு அநீதி நேர்ந்தால் என்னவாகும், அதுவும் தான் உயிர்க்கு உயிராக மதிக்கும் கணவரே அந்த அநீதியை செய்தால் என்னவாகும் என்பதை நோக்கி தான் இந்த பாக்கியலட்சுமி கதை சென்று கொண்டிருந்தது.

தற்போது அந்த கட்டம் வந்துவிட்டது. ஆம், பாக்கியலட்சுமியின் கணவர் கோபி, ராதிகா என்கிற பெண்ணுடன் தொடர்பில் இருந்த விவகாரம் பாக்கியலட்சுமிக்கு தெரிந்து விட்டது. இதே போல் ராதிகாவுக்கும் தம்முடைய தோழி பாக்கியலட்சுமியின் கணவர்தான் கோபி என்று விஷயம் தெரிய வந்துவிட்டது. இதனை அடுத்து கோபியை நடுவீட்டில் நிற்க வைத்து, அனைவர் முன்னிலையும் சரமாரியாக கேள்வி கேட்ட பாக்கியலட்சுமி, அதிரடியாக வீட்டை விட்டு கிளம்புவதாக முடிவெடுத்து வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

இது காட்சிகளை பார்த்த ரசிகர்கள், இந்த காட்சிக்காகதான் நாங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். ‘வா தலைவி வா’ என்றெல்லாம் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

மேலும் சிலர், “இப்படித்தான் கண்ணம்மா பொங்கி எழுந்தார். ஒரு சாதாரண பெண் அமைதியாக இருந்த சூழ்நிலையில் இருந்து தனக்கு நேரும் அநீதியை கண்டு பொங்கி எழுந்த பின்னர், வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சூழ்நிலை கண்ணம்மாவுக்கு ஏற்கனவே வந்தது. பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டரும், இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரும் ஒன்றுதான் என்பது போல் ஆகிவிட்டது. இப்போது கண்ணம்மாவின் வரிசையில் பாக்கியலட்சுமி சேர்ந்து விட்டார்” என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

மேலும் கண்ணம்மா, பாக்யலட்சுமியை பார்த்து, “அக்கா இனி நாம் இருவரும் ஒரே மாதிரி ஆகிவிட்டோம்!” என்று சொல்வதாக மீம்ஸ்களையும் போட்டு வருகின்றனர். இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் தினந்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதேபோல் இரவு 9 மணிக்கு தினமும் ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தன்னுடைய கணவர் பாரதி, தன்னுடைய மகளை மகளாக ஏற்கவும், தன்மீதான சந்தேகம் நீங்கவும் காத்திருக்கிறார்.

ஆனால் பாக்கியலட்சுமி தற்போதுதான் வீட்டை விட்டே வெளியேறி இருக்கிறார். இனி பாக்கியலட்சுமியில் என்னென்ன அரங்கேற போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

Also Read | Baakiyalakshmi: பொறுமை இழந்து எரிமலையான பாக்யா.. ‘வீட்டை விட்டு வெளியேறிய’ பரபரப்பான கட்டம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi left home like Bharathi Kannamma serial

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi New Promo, Baakiyalakshmi serial today promo, Baakiyalakshmi today episode, Vijay Television, Vijay tv will find this news story useful.