BAAKIYALAKSHMI : ‘இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்துருக்கு.. ஆனா இதான் முதல் தடவ’! - பாவம்யா கோபி..😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர், ஒவ்வொரு எபிசோடிலும் பல பரபரப்பான திருப்பங்களுடன் தான் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | இரட்டை வேடத்தில் காஜல் அகர்வாலின் "காமெடி பேய் படம்... "இப்படி ஒரு கான்செப்ட்டா..".. செம டீசர்

மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்ய அனைத்து வழிகளிலும் திட்டம் போட்டு வந்த கோபி, கடைசியில் அதனை நிறைவேற்றவும் செய்து விட்டார். முன்னதாக, மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு நீண்ட காலம் அவர் ஏமாற்றியும் வந்தார். இதன் பின்னர், சமீபத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட சமயத்தில், பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளும் கூட பிக்பாஸ் தொடரில் அரங்கேறி இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி தொடர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் ராதிகா, கோபியிடம், கோபி, காபி போட்டா ரெண்டா போடுங்க.. என சொல்லிவிட்டு சென்றுவிட, அப்போது புலம்பும் கோபி,  “ரெண்டு காபியா.?? அடிப்பாவி கொஞ்சமாச்சும் உனக்கு மனசாட்சி இருக்கா? நான் போட்ட காபிய என்னாலயே குடிக்க முடியல.. ஒருவேளை ராதிகா அந்த காபிய குடிச்சிட்டு சரியில்லனு மூஞ்சில ஊத்திட்டா என்ன செய்றது..? இந்த வீட்ல ஒரு மகா யுத்தம் நடந்துச்சுனா அது காபியாலதான்.. டேய் கோபி.. அந்த வீட்ல ராஜா மாதிரி சொகுசா இருந்தேன் .. இங்க உன் நிலமை இப்படி ஆயிடுச்சேடா கோபி!” என்று புலம்புகிறார்.

அதன் பிறகு ரேஷன் கார்டில் இருந்து தன் பெயரை பிரிக்க சொல்லி பாக்கியலட்சுமியிடம் போன் பேசச் சொல்லி ராதிகா கூறினார். அதை கேட்டு, பாக்கியலட்சுமியிடம் போன் பண்ணி கோபி சண்டை போட்டுவிட்டு போனை வைத்துவிட்டார். அதற்கும் ராதிகா, “நீங்க ரேஷன் கார்டை கேட்காமல் ஏன் மனைவியிடம் போன் பண்ணி சண்டை போடுவது போல் இவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்?” என லாக் பண்ணுகிறார்.

கேட்டுவிட்டு ராதிகா அந்த பக்கம் சென்றுவிட, அப்போது கோபி, “அடிப்பாவி. இவ சொல்லிதானே போன் பண்ணேன்.. நான் என்னமோ ஆசையா பேசுன மாதிரி சொல்றாளே.. சாவடிக்குறாளே.. 25 வருஷம் அந்த வீட்ல செத்தேன்.. இனி இந்த வீட்ல சாகடிப்பாங்க போல.” என புலம்புகிறார். 

இதை பார்த்த ரசிகர்கள், பாவம்யா கோபி, இருந்த நல்ல மனைவி, நல்ல வாழ்க்கையை விட்டுவிட்டு இப்படி பரிதாபமாக புலம்புகிறார், இன்னும் என்னவெல்லாம் சந்திக்க போறாரோ மனுசன் என கிண்டலடித்துவருகின்றனர்.

Also Read | Bharathi Kannamma : வெண்பா தாக்கப்பட்டார்.. 😂 பாரதியுடன் அவசர திருமணம்.. படையோடு வந்து தடுத்த கண்ணம்மா.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi gopi thuglife prepares coffee for radhika

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Baakiyalakshmi serial promo, Baakiyalakshmi Serial Today Episode, Baakiyalakshmi today, Gopi, Radhika will find this news story useful.