ஆமா.. பாக்யா எங்க? ராதிகா வீட்ல உல்லாசமா இருந்துட்டு கூலாக கேட்ட கோபி.. பளார் விட்ட அப்பா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடரில் சமீபத்தில், பாக்கியாவை போலீசார் கைது செய்திருந்த சம்பவம், அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | Marriage Marriage Marriage.. திருமண அழைப்பிதழில் இருந்த KGF 2 வசனம்.. "மாப்பிள்ளைக்கு இன்னும் Vibe அடங்கல போல.."

ராதிகாவின் மகள் மயூராவின் பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகள் காப்பகம் ஒன்றில், உணவு வழங்க ராதிகா ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும், உணவு தயார் செய்வதற்கான வேலையையும் பாக்கியாவிடம் ராதிகா ஒப்படைத்திருந்தார்.

ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

அப்படி குழந்தைகள் உணவு உண்ட பிறகு, அனைவரும் மயக்கம் அடைந்து விழுவதாக காப்பகத்தில் இருந்து அழைத்து, ராதிகாவிடம் தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் அதிர்ந்து போன ராதிகா, உடனடியாக கோபியை அழைத்துக் கொண்டு அங்கே சென்றார்.

கொஞ்ச நேரத்தில் அங்கே போலீசாரும் வந்து சேர, ராதிகாவிடம் உணவை தயார் செய்தது யார் என்பது பற்றி விசாரித்து, பாக்கியாவின் வீட்டிற்கு சென்று அவரைக் கைது செய்தும் அழைத்து செல்கின்றனர். இதனால், பாக்கியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போக, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

அம்மாவ எப்படி ஆச்சும் காப்பாத்தணும்..

அடுத்ததாக, தாயை காப்பாற்றும் முயற்சியில் எழில் இறங்க, பாக்கியாவின் உணவின் மூலம் குழந்தைகள் மயக்கம் அடையவில்லை என்பதையும், யாரோ ஒருவர் கொண்டு வந்த கெட்டு போன லட்டு மூலம் தான், அவர்கள் மயக்கம் அடைந்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார். இதனை கோர்ட்டிலும் நிரூபித்து, தாயை வெளியேயும் கொண்டு வருகிறார்.

கூலாக வீட்டுக்கு வரும் கோபி..

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், மற்றொரு பரபரப்பு சம்பவம், கோபி வீட்டில் அரங்கேறுகிறது. மனைவி பாக்கியாவிற்கு நடந்தது பற்றி எந்த கவலையும் கொள்ளாத கோபி, ராதிகா வீட்டில் இரவு தங்கி விடுகிறார். தொடர்ந்து மறுநாள் வீட்டிற்கு வருகிறார் கோபி. குடும்பத்தினர் அனைவரும் பாக்கியாவிற்கு நடந்ததை நினைத்து சோகத்தில் இருக்க, பாக்கியாவுக்கு என்னாச்சு என கேட்கிறார். இதனைக் கேட்டதும், இவ்வளவு நேரம் நீ எங்கே போனாய் என கோபியின் தாய் கோபத்தில் கேட்க, மறுகணமே கோபியின் சட்டையை பிடித்து, அவரை அடிக்கிறார் கோபியின் தந்தை.

கோபத்துல என்னா அடி..

ராதிகாவுடனான கோபியின் உறவு பற்றி அவரின் தந்தைக்கு தெரியும் என்பதால், ராதிகா வீட்டில் தான் கோபி எல்லாவற்றையும் அறிந்து கொண்டு இருந்திருக்கலாம் என்றும், மனைவி பற்றி கோபி பெரிய அளவில் அக்கறை எடுக்காமல் இருந்திருப்பார் என்றும் அவரது தந்தை கருதி, அந்த கோபத்தில் இப்படி மகனை தாக்குவதாக பாக்கியலட்சுமி ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் கெட்டு போன லட்டை கோபியே கொடுத்து, மனைவியை சிக்க வைத்திருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்களுக்கு உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், மனைவி மீது அக்கறை இல்லாமல் கோபி நடந்து கொண்ட விதம், நிச்சயம் அவரை விரைவில் சிக்க வைத்து விடும் என கருதப்படுகிறது.

Also Read | திடீர் கைது… அம்மாவிடம் கெஞ்சும் வெண்பா – என்ன ஆச்சு? பாரதி கண்ணம்மாவில் பரபரப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Gopi father get anger and starts to beat him

People looking for online information on Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Baakiyalakshmi Serial Today Episode, Gopi, Vijay tv will find this news story useful.