"என் பொண்டாட்டி பத்தி தான் உனக்கு தெரியும்ல.?" போர்வைய போத்திட்டு பாசாங்கு பண்ணிய கோபி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடரில், கோபி தற்போது படும் பாடு தான், தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்ற பரபரப்பு மட்டும் தான் நிலவிக் கொண்டே இருந்தது.

மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்யத் துணிந்த கோபி, அதற்கு வேண்டி மனைவியை ஏமாற்றி, பல தில்லாலங்கடி வேலைகளையும் பார்த்திருந்தார்.

அல்லோலப்படும் கோபி

கோர்ட்டு காட்சிகள் வந்த சமயத்தில், அப்பாவி பாக்கியலட்சுமிக்கு தான் இப்படி ஆக வேண்டுமா என தொடரின் ரசிகர்கள் சற்று வேதனை அடைந்திருந்தினர். அந்த அளவுக்கு கடும் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி, தற்போது சற்று நிதானமாக, அதே வேளையில், அல்லோலப்பட்டு கிடக்கும் கோபியின் நிலையை மிகவும் ஃபன்னாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமிக்கு வந்த சந்தேகம்

அதிலும் சமீபத்தில், ராதிகா வீட்டில் கோபி இருந்த போது, எதிர்பாராத விதமாக பாக்கியலட்சுமி மற்றும் செல்வி ஆகியோர் வந்த காட்சிகள் எல்லாம் ரணகளத்திலும் ரணகளம். ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்ட கோபி, போனில் பேசுவது போல நடித்து, தப்பித்துக் கொண்டதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இன்னொரு பக்கம், ராதிகாவின் வீட்டில் இருந்து கிளம்பும் போது, வீட்டிற்கு வெளியே கோபியின் காரை பார்த்த பாக்கியலட்சுமிக்கு சந்தேகம் வராமலும் இல்லை. இருந்தாலும், தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் கோபி, எப்போது வசமாக சிக்கப் போகிறார் என்பது பற்றி தான், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்னா ஆக்டிங்

இந்நிலையில், மீண்டும் ஒரு முறை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், ராதிகாவிடம் கோபி போடும் ஆக்டிங் தான் ஹட் டாபிக்காக உள்ளது. வீட்டில் இருக்கும் கோபியை, வீடியோ காலில் அழைப்பதாக ராதிகா கூறவே, உடனடியாக தான் உடல்நிலை சரியில்லாத ஆள் போல, போர்வையை போர்த்திக் கொண்டு, நடிக்க தயாராகிய பிறகு, ராதிகாவின் அழைப்பை எடுக்கிறார்.

என் மனைவி பத்தி தான் தெரியுமே

கோபியின் உடல்நலம் பற்றி அக்கறையுடன் ராதிகா விசாரிக்க, வீட்டில் யார் உடன் இருக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்கிறார். "எல்லாம் தெரிஞ்ச நீயே இப்டி கேக்குறே. நான் மட்டும் தான் வீட்ல இருக்கேன். எல்லாரும் அவங்க வேலைய பாக்க கிளம்பி போய்ட்டாங்க. என் வைஃப் பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே. அவளை என் வைஃப் ன்னு சொன்னா உனக்கு கோபம் வரும்'ல" என லைட்டாக ராதிகாவை கோபி உசுப்பி விடுகிறார்.

இதனால், தன்னுடைய வீட்டிற்கு வரும்படி, கோபியை ராதிகா அழைக்க, பதிலுக்கு வருவதாக வாக்கு கொடுத்து விட்டு, வீடியோ காலினை கோபி துண்டிக்கிறார். மறுநொடியே, சரியாகி, சவுண்டை உயர்த்தி பேசத் தொடங்குகிறார் கோபி.

பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா என இருவருக்கும் இடையில், சிக்கிக் கொண்டுள்ள கோபி, தொடர்நது தன்னுடைய நாடகத்தால் தப்பித்து வந்தாலும், இதற்கு ஒரு நாள் முடிவு தெரிய வரும் என்றே ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi gopi acting to radhika in video call

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Baakiyalakshmi serial, Gopi, Radhika will find this news story useful.