BAAKIYALAKSHMI: "நீங்க விரும்புனவரையே கல்யாணம் பண்ணிட்டு.".. ராதிகாவிடம் பாக்யா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில், கோபியின் நாடகங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது என்பதை அடுத்தடுத்து வெளிவரும் ப்ரோமோக்களும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "பாத்துக்கலாம்.." விக்ரம் படத்தில் கமலின் கதாபாத்திரம் இது தான்.. வெளியானது 'Official' அப்டேட்

பாக்கியலட்சுமி தொடரின் ஒவ்வொரு எபிசோடும், முழுக்க முழுக்க விறுவிறுப்பு நிறைந்த வகையில் தான் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

மனைவி பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கு மத்தியில், ஏராளமான நாடாகங்களை தொடர்ந்து போட்டு வந்த கோபியின் வண்டவாளங்கள் அனைத்தும், விரைவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகாவுக்கு தெரிய வந்த உண்மை

பாக்கியா மற்றும் ராதிகாவை ஏமாற்றி வந்த கோபி குறித்து, அவரது குடும்பத்தில் ஒரு சிலருக்கு, தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து, ராதிகாவுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல், கோபி மீது சந்தேகம் எழ, அவரின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா அடம்பிடிக்கிறார்.

இதற்கு கோபி மறுப்பு தெரிவிக்கவே, அங்கே சண்டையும் உருவாகிறது. இதன் பின்னர், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி பாக்கியாவுடன் இருக்கும் புகைப்படத்தை காண்பிக்க, துடிதுடித்து போகிறார் ராதிகா.

மனமுடைந்த பாக்கியா

இதன் பின்னர், தன்னுடைய வீட்டிற்கு செல்லும் கோபி, அங்கு போதையில் தூங்க, ராதிகா குறித்து மறைமுகமாக புலம்பவும் செய்கிறார். இதனைக் கேட்கும் பாக்கியாவும் மனம் உடைந்து போகிறார். இப்படி பாக்கியா மற்றும் ராதிகா என இருவரிடமும் ஒரே நேரத்தில் கோபி சிக்கிக் கொள்வது போல காட்சிகள் இருக்க, அடுத்து சில ப்ரோமோக்கள் அதிரடியாக வெளியாகி உள்ளது.

உண்மை அனைத்தையும் போதையில் தெரிவித்த பின்னர், ராதிகா வீட்டிற்கு கோபி வரவே, மகள் மயூராவை கோபி அருகே சேர்க்காமல் எச்சரிக்கிறார் ராதிகா. ஒன்றும் புரியாமல் நிற்கும் கோபி, காரணம் என்ன என்பது பற்றி கேட்க, "யாரு நீங்க. இங்க எதுக்காக வந்திருக்கீங்க?" என கோபியை பார்த்து கோபமாக ராதிகா கேட்க, ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார் கோபி.

"நீங்க சந்தோஷமா இருக்கணும்"

முந்தைய தினம், தான் ராதிகாவிடம் போதையில் என்ன பேசினோம் என்பது கோபிக்கு மறந்து போயிருக்கலாம் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து,  கோபி சென்ற பிறகு, ராதிகா வீட்டிற்கு வரும் பாக்கியாவிடம், "அவர் பேமிலி பத்தி சொன்ன எல்லாமே பொய் டீச்சர். அவரு எல்லா உண்மையும் இப்போ என்கிட்ட சொன்னாரு" என்ற படி, கண்ணீர் வடிக்கிறார் ராதிகா. "அவரே அவரை பத்தி சொல்லி இருக்காருன்னா, அவரு நல்லவரா இருக்கவும் வாய்ப்பு இருக்குல்ல. நீங்க விரும்புனவர கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன். கவலைப்படாதீங்க" என பாக்கியா ஆறுதல் கூறுகிறார்.

உண்மை அனைத்தும் தெரிந்த ராதிகா, அப்படியே ஒரு நொடி அதிர்ந்து போய், பதிலுக்கு என்ன பேசுவது என்பது தெரியாமல் மவுனமாக நிற்கிறார். இனி வரும் நாட்களில், நிச்சயம் பாக்கியலட்சுமி தொடரில் நிறைய எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "ரெண்டே ரெண்டு பாட்டு'ல.." ஆடியன்ஸை கட்டிப் போட்ட Jonita Gandhi.. Behindwoods விருது மேடையில் அமர்க்களம்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiya console radhika in baakiyalakshmi serial

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.