"அந்த ஒரு வரில நின்னுட்டய்யா".. BIGG BOSS வீட்டில் அசிம் எழுதிய வாசகம்.. எமோஷனல் ஆன பார்வையாளர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஒண்ணாம் நம்பர் அராத்த காணல".. தனாவுக்கு ADK டெடிகேட் செய்த பாட்டு.. சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த நிறைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக் பாஸ் வீடு இருக்கிறது.

முன்பு போல மீண்டும் கலகலப்பாக போட்டியாளர்கள் இயங்கி வருவதால், ஒவ்வொரு விஷயமும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசிம் எழுதி வைத்துள்ள வாசகம் தொடர்பான விஷயம் ஒன்று இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

பிக் பாஸ் Finale வில் வெற்றி பெறும் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் அசிம். ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டையும், வாக்குவாதங்களும் போட்டு வந்துள்ளார் அசிம். மறுபக்கம், நிறைய சிறந்த குணங்களும் அவரிடம் உள்ளதால் தற்போது ஏறக்குறைய இறுதி சுற்று வரையும் வந்து விட்டார். பல முறை நாமினேஷனில் இருந்த போதும், பார்வையாளர்கள் ஆதரவால் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராகவும் அசிம் வலம் வருகிறார்.

அதே போல சிலரிடம் சண்டை போட்டாலும் மறுநாளே அவர்களுடன் ஒன்றாகி ஜாலியாகவும் இருக்க ஆரம்பித்து விடுவார் அசிம். சமீபத்தில் கமல்ஹாசன் தோன்றி இருந்த போது கூட Finale வில் யார் வெற்றி பெற தகுதி இல்லை என கேட்ட போது அசிம் பெயரை நிறைய போட்டியாளர்கள் கூறி இருந்தனர். இதனால், அவர் சற்று மனம் தளர்ந்தும் போயிருந்தார்.

இதற்கு மத்தியில், பிக் பாஸ் வீட்டின் கதவு அருகே அசிம் ஒரு வாசகத்தை எழுதி வைத்துள்ளார். அதில், "பல ஏச்சுகளையும், பேச்சுகளையும் கேட்ட இவ்வீட்டில் என்றும் நிலைத்திருக்கும் என் மூச்சு" என உருக்கத்துடன் அசிம் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "வந்ததும் திரும்ப ஆரம்பிக்காதீங்க, சரியா?".. முட்டிக்கொண்ட அசிம், மகேஸ்வரி.. "ஆஹா, இது அதுல்ல"!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem quote written in bigg boss house fans emotional

People looking for online information on Azeem, Azeem quote, Bigg boss 6 tamil, Bigg boss house, Bigg Boss Tamil 6, Vijay tv will find this news story useful.