"எத வெச்சு விக்ரமன் ஃபைனல் வருவாருன்னு சொல்றீங்க?".. ADK-கிட்ட அசிம் முன் வெச்ச கேள்வி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze டாஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | நீங்க நியாயம் ஆனவன் மாதிரியும் மத்தவங்க.. புது ரவுண்டில் அசிம் Vs விக்ரமன்.. மீண்டும் மீண்டுமா?

பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் வந்து பகிர்ந்து கொண்ட விஷயம், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், அவர்களுக்காக கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள், அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், மணிகண்டா ராஜேஷின் தாய், சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ், மனைவி, குழந்தை உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரும், ஏடிகே, விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்களும், அசிமின் சகோதரர் மற்றும் நண்பர் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த வார பிக் பாஸ் எபிசோடுகள் அமோக வரவேற்பையும் பார்வையாளர்கள் மத்தியில் பெற்றிருந்தது. இதற்கு மத்தியில், தற்போது டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் தங்களின் தகுதி குறித்தும் ஒவ்வொருவராக பேசும் படி அறிவுறுத்தப்படுவதாக தெரிகிறது. இதில், ஒவ்வொருவரும் தங்களின் தகுதி மற்றும் விளையாட்டுத் திறன் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது விக்ரமன் பைனலில் வருவார் என குறிப்பிட்டு பேசும் ஏடிகே, அவர் எப்போது மற்றவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் பேச மாட்டார் என்றும் அது தவிர யாரை பற்றி தவறாக பேச மாட்டார் என்றும் நிறைய விஷயங்களை குறிப்பிடுகிறார். இறுதி சுற்றில் என்னுடன் இருப்பார் என்றும் ஏடிகே தெரிவிக்கிறார்.

அப்போது ஏடிகேவிடம் கேள்வி எழுப்பும் அசிம், "உங்களுடன் பைனலில் விக்ரமன் இருப்பார் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். விக்ரமன் தற்போது உள்ள துறையை சார்ந்தவர்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். டிஜிட்டல் முறையில் வாக்களித்து அவரை இறுதி சுற்றில் ஒருவராக கொண்டு வருவார்கள் என்ற அடிப்படையில் நீங்கள் அவர் இறுதி போட்டிக்கு வருவார் என கூறினார்களா? அல்லது இந்த வீட்டில் அவருடைய செயல்பாடுகளை வைத்து சொன்னீங்களா?" என கேட்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் ஏடிகே, "எனக்கு அவர் அரசியலில் இருந்தது பற்றியும், விக்ரமன் யார் என்பது பற்றியும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படி இருக்கும் போது இங்கே அவருடன் பழகியதை வைத்து தான் அப்படி சொன்னேன். மத்தபடி வெளியே அவருக்கு சேரும் வாக்கு எண்ணிக்கைகள் குறித்து நான் கூறவில்லை. அவர் செய்யும் சமுதாய பணிக்கு வேறு விதமாக வாக்கு கிடைக்கும். ஆனால், இங்குள்ள வாக்குகள் என்பது அரசியல் தாண்டி மற்ற அனைத்து மக்களும் விக்ரமனுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read | "என் மக அவ.. கதிர் & ஷிவின் பிரதர், சிஸ்டர் மாதிரி".. கதிரவன் தாய் பெருமிதமாக சொன்ன விஷயம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem questions about how vikraman enter finale to adk

People looking for online information on ADK, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.