பிக்பாஸ் வீட்டுல இருந்து வெளியேறிய கதிரவன்.. கண்கலங்கிய அசீம்.. மணிகண்டா சொன்ன விஷயம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "அசீம் கிட்ட இந்த விஷயம் பிடிக்காது".. வெளியேறிய பின்னர் உடைத்துப் பேசிய ADK..!  

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.

ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என கதிரிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர். GP முத்து, ரச்சிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் இன்னும் சில நாட்களே மிச்சம் இருப்பதாகவும் காத்திருந்திருக்கலாம் எனவும் கதிரிடம் கூறினர். அப்போது, தான் பணத்துக்காக இந்த முடிவை எடுக்கவில்லை என கூறிய கதிர், பின்னர் போட்டியாளர்களிடம் விடைபெற்று  சென்றிருக்கிறார்.

திடீரென பணத்துடன் தான் வெளியேறுவதாக கதிர் அறிவித்ததால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர். இதனிடையே, தனியாக இருக்கையில் அமர்ந்திருக்கும் அசீம் கண் கலங்குகிறார். தனது கண்ணீரை அவர் துடைத்துக்கொள்ளும்போது அங்கு வரும் மணிகண்டா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அப்போது,"இன்னும் 4 நாள் தான். எல்லாம் சரியாகிடும். ஃப்ரீயா விடு" என்கிறார் மணிகண்டா. அதற்கு அசீம் கவலை தோய்ந்த குரலில் சரி என்கிறார்.

Also Read | நேத்து பண மூட்டை.. இன்னைக்கு பணப்பெட்டி.. முதல் தடவை Bigg Boss -ல நடந்த மாற்றம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem in Tears after Kathiravan opted to exit from BiggBoss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kathir, Kathiravan will find this news story useful.