"கோவக்காரன் தான்.. பாவக்காரன் இல்ல‌..".. வெளியேறுவது குறித்து அசீம் பரபரப்பு பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | Doll Task : அசீம் - விக்ரமன் விஷயத்தில் Bigg Boss எடுத்த முடிவு?.. அடுத்தது என்ன??

முன்னதாக முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, சொந்த முடிவுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.

இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்துஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வருகிறது.

மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக மகேஸ்வரி, ADK, அசீம் உள்ளிட்ட போட்டியாளர்களிடமும் விக்ரமன் கேள்வி கேட்கிறார். அதில், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார் அசீம். மறுபக்கம் அதில் உறுதி இல்லை என்றும் விக்ரம் கூறுகிறார். இப்படி இருக்க, தன்னை யாரோ தள்ளி விட்டார்கள் என்றும் ஆனால் யார் என்பது சரியாக தெரியவில்லை என்றும் குயின்ஸியிடம் ஷெரினா கூறுகிறார்.

இதற்கு மத்தியில், அமுதவாணன், ஷிவின் உள்ளிட்டோரிடமும் அசீம் கோபத்துடன் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால், உரிய முறையில் என்ன நடந்தது என்பதை ஆவணங்களுடன் வார இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் குறும்படமாக வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் சக போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் அசீம், "100 நாட்கள் அல்லது 10 நாட்கள் இருப்பதில்லை. 10 நாட்கள் நான் இருந்தாலும் எனது தடம் இருக்க வேண்டும். இப்படி ஒருத்தன் வந்தான் டா. அவன் கோவக்காரன் தான். ஆனா மோசக்காரன் இல்ல அப்படின்னு சொல்லணும். இதுவரைக்கும் பிக்பாஸ் வீட்டுல அசீம் பின்னாடி பேசிட்டான், அசீம் பொய் சொல்லிட்டான் என ஒருவர் சொல்லட்டும். அசீம் கோபப்படுகிறான் என்று மட்டும் தான் மக்கள் சொல்வார்கள்.

நான் கோபக்காரன் என பெயர் எடுப்பேன். ஆனால், அவன் பாவம் பண்ணிட்டான், பாவக்காரன், தப்பு பண்ணிட்டான், இவங்கள பத்தி அப்டி பேசிட்டான், இவங்கள அடிச்சுட்டான்னு யாருமே சொல்ல முடியாது. அப்படி யாராவது சொல்லி விட்டால், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு உடனடியாக நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன். மோசக்காரன் என்ற பெயரை நான் எடுக்கவில்லை. அந்த விதத்தில் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Baakiyalakshmi : "பிரியாணி வாசனை ஆள தூக்குதே".. நம்பி உக்காந்த கோபி.. ராதிகா வெச்ச ட்விஸ்ட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem explains about himself to other biggboss contestants

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Biggboss contestants, Vijay Television, Vijay tv will find this news story useful.