"இதுக்கு கதிரவன் தான் கரெக்ட்டு".. ரகசிய பிளான் போடும் அசீம், ரச்சிதா.. இனி ரகளைகள் தான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்புமுனைகளுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "விக்ரமன் கண்டிப்பா ஃபைனல் போவாரு.. BIGG BOSS மகேஸ்வரி EXCLUSIVE கணிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. இதன் காரணமாக உருவான பல பிரச்சனைகளுக்கு வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விடை அளித்திருந்தார். இதற்கு மத்தியில், ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார்.

இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். இதன் பின்னர், கடைசியாக சமீபத்தில் மகேஸ்வரியும் எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில், புதிய டாஸ்க்கின் காரணமாக இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராஜா - ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப் போட்டுவிட்டதாக பணியாளர்கள் மீது ரச்சிதா கோபம் கொண்டு சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார். இதுகுறித்து பிக்பாஸ் வீட்டிற்குள் ஏராளமான சண்டைகள் வெடித்திருந்தது. இதன் காரணமாக, அசீம் மற்றும் விக்ரமன் இடையேயும் சண்டை உருவாகி இருந்தது.

இந்த நிலையில், ராணி ரச்சிதா மற்றும் படைத் தளபதி அசீம் ஆகியோருக்கு ரகசியமாக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்த காட்சிகள் இன்னும்  அதிகம் பிக்பாஸ் வீட்டிற்குள் சூட்டை அதிகரித்துள்ளது. அசீம் மற்றும் ரச்சிதா ஆகியோருடன் பேசும் பிக்பாஸ், இந்த ராஜ்யத்தின் ஒரு ராஜ ரகசியத்தை கூறுவதாக கூறி, கஜானாவில் செல்வங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாகவும், எனவே ராஜ வம்சத்தை சேர்ந்த பொருளை திருடி கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அசீம் மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும் என்பதை மாறி மாறி உணர்த்த இருவர் கையிலும் பாதி பாதி மேப் ஒன்றை கொடுத்து அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் காணவும் பிக்பாஸ் உதவுகிறார்.

இதனைத் தொடர்ந்து கஜானாவில் பொருட்கள் சேர்ப்பது குறித்தும் அசீம் மற்றும் ரச்சிதா ஆகியோர் திட்டம் போடுகின்றனர். இதற்காக சக போட்டியாளர் ஒருவரை தங்களுடன் ரகசியமாக சேர்க்கவும் அவர்கள் திட்டம் தீட்டுவதாக தெரிகிறது. அந்த வகையில், கதிரவனை தங்கள் அணியில் சேர்க்கலாம் என்றும் அவரிடம் ஒரு Poker Face இருப்பதால், மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள மாட்டார் என்பதையும் அசீம் ரச்சிதாவிடம் விளக்குகிறார்.

கஜானாவின் பெயரில் ரகசிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அரங்கேற்றி உள்ளதால் நிச்சயம் இது பெரிய அளவில் விறுவிறுப்பையும் அதே சமயத்தில் ரணகளத்தையும் உண்டு பண்ணும் என்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்

Also Read | மணிகண்டா Bluetooth ஷூவை பயன்படுத்தினாரா?.. சந்தேகத்தில் பரிசோதித்த பிக் பாஸ்.? மைனா சொன்னது என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and rachitha secret task plan with kathiravan in bigg boss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Rachitha, Robert, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.