"என்னது? BIGG BOSS அசிம், ரச்சிதா சேர்ந்து சீரியல்ல நடிச்சுருக்காங்களா?".. இது எப்ப?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 பேர் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "குழந்தை பெற்ற பிறகும் HOT-ஆ இருக்கீங்க".. இணையவாசியின் மோசமான கேள்விக்கு ப்ரணிதா பதிலடி!

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார எலிமினேஷனில் ஜனனியும் வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

இதற்கடுத்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஆரம்பப் பள்ளியாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். அப்போது, ரச்சிதாவுடன் சீரியலில் நடிக்க இருந்தது பற்றி அசிம் பேசிய விஷயம், அதிக வைரலாகி வருகிறது.

போட்டியாளர்கள் அனைவர் மத்தியிலும் அமர்ந்து பேசும் அசிம், "புதுசா சீரியல் ஒண்ணு ஆரம்பிக்கிறோம். அதுக்கு பேரு 'பிரிவோம் சிந்திப்போம் 2'. அந்த சீரியலோட ஹீரோயினா ரச்சிதா இருக்காங்க. அந்த சீரியலுக்கு என்ன ஹீரோவா கூப்பிடுறாங்க. அதுக்காக நான் போனதும் மேடம் (ரச்சிதா) பிளாக் மேக்கப்போட மேல உக்கார்ந்துட்டு இருக்காங்க. அவங்க பேரு அதுல ஜோதி, என் பேரு கார்த்திக். நானும் ரச்சிதாவும் ஹீரோ ஹீரோயினா நடிச்சுட்டு இருந்தோம். அந்த சீரியல் ஷூட் பண்ணிட்டு இருக்கும் போது சில காரணங்களால பாதியிலேயே ஸ்டாப் ஆயிடுச்சு" என  அசிம் தெரிவித்தார்.

ரச்சிதா மற்றும் அசிம் ஆகியோர் இணைந்து சீரியல் நடித்தது தொடர்பான செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | ரச்சிதா மற்றும் அசிம் ஆகியோர் இணைந்து சீரியல் நடித்தது தொடர்பான செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and Rachitha act together in serial share in bigg boss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Rachitha, Vijay Television, Vijay tv will find this news story useful.