தனுஷ் நடிக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்-2'.. செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆயிரத்தில் ஒருவன் -2 படம் குறித்து செல்வராகவன் மனம் திறந்துள்ளார்.

Advertising
>
Advertising

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
இன்றுவரை இளைஞர்களுக்கு பிடித்தமான செல்வராகவன் படங்களில், முக்கியமான படமாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பேசப்பட்டு வருகிறது.

சோழப் பேரரசின்  வீழ்ச்சி மற்றும் பாண்டிய பேரரசின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் செல்வராகவன் கற்பனையில் உருவானது. ஜனவரி 1, 2021 அன்று, ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டார்.

இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிப்பதை செல்வராகவன் உறுதிப்படுத்தினார். மேலும் தனது கதாபாத்திரத்தின் ஓவியத்தை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படம் 2024 இல் ரிலீஸ் ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் செல்வராகவன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன் "அடுத்த ஒரு மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் படத்தின் அப்டேட் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ayirathil Oruvan AO2 Dhanush Selvaraghavan Movie

People looking for online information on AO2, Ayirathil Oruvan, Dhanush, Selvaraghavan will find this news story useful.