"தனா பேசவே இல்ல, என்ன பிரச்சனைன்னு தெரியணும்".. FEEL பண்ணிய ஆயிஷா.. கொஞ்ச நேரத்தில் நடந்த மேஜிக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது. இதனிடையே, சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி இருந்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா என முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களும் என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருந்தது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் ரச்சிதா மற்றும் ஆயிஷா ஆகியோர் நலம் விசாரிக்கவும் செய்திருந்தனர். அப்படி இருக்கையில், தனா குறித்து சக ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய ஆயிஷா, "இவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலையே. என்னவோ மாதிரி போறாளே. தனா வந்து பேசவே இல்ல. என்ன பிரச்சனைன்னு தெரியல, தெரியணும்ல. அது எப்படி விட முடியும். அப்பறம் எனக்கு 2 நாள் போரிங்கா போய்டும்ல" என்றும் ஆயிஷா கூறுகிறார். இதனைத் தொடர்ந்து, தனாவை அழைத்து பேசும் படியும் மணிகண்டா அறிவுறுத்துகிறார்.

இதற்கடுத்து சிறிது நேரம் கழித்து ஆயிஷா மற்றும் தனா ஆகியோர் பேசியதாகவும் தெரிகிறது. அப்போது தனக்கு வெளியே சென்ற முதல் நாள் சற்று கவலையாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதுவே சரியாகிவிட்டதாகவும் ஆயிஷா கூறுகிறார். தொடர்ந்து பேசிய தனலட்சுமி, தனக்கு வீட்டு ஞாபகம் வந்ததாகவும், எப்படியாவது வெளியே போக வேண்டுமென நினைத்ததாகவும் அப்போதே தான் வெளியே போயிடுவேன் என உறுதியானதாகவும் கூறி உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ayesha about dhanalakshmi after her re entry in bigg boss house

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Dhanalakshmi will find this news story useful.