இயக்குநர் அட்லீ குடும்பத்தில் நடந்த சோகம்! அட்லீயின் மனைவி உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் அட்லீ.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த இயக்குநர் அட்லீ, எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி தம்முடைய முதல் திரைப்படமாக ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லீ அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் அட்லியின் குடும்பத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.  அட்லியின் பெரியப்பா நீதிபதியான திரு சௌந்தரபாண்டியன் காலமாகி இருக்கிறார்.

இதுகுறித்து தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார், அட்லீயின் மனைவி பிரியா அட்லீ. அதில், “அட்லீயின் பெரியப்பா காலம் ஆகிவிட்டார். தாங்கள் என்னை உங்கள் சொந்த மகளாகவே நடத்தினீர்கள் அங்கிள். எங்கள் வாழ்வில் நீங்கள் சொன்னதை என்றும் மறக்க முடியாது. லவ் யு அங்கிள்.. மிஸ் யூ .. தங்கள் ஆன்மா சாந்தி பெறட்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: களைகட்டும் 93வது ஆஸ்கர் விருதுகள்..  Tenet படத்துக்கு கிடைத்த விருது என்ன தெரியுமா?

Tags : Atlee

தொடர்புடைய செய்திகள்

Atlee periyappa passed away priya atlee instagram post

People looking for online information on Atlee will find this news story useful.