"சந்தோசத்தின் குவியலை தரப்போகும்".. அட்லி - பிரியா தம்பதி சொன்ன குட் நியூஸ்.. !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. குறும்படங்கள் இயக்கி தனது திறனை நிரூபித்த அட்லி, ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "விஜய் கைல தூக்கி வெச்சிகிட்டதே போதும்.." - Fans Meet -ல் வைரல் ஆன ரசிகரின் குடும்பம் நெகிழ்ச்சி.!

அதன் பின்னர் முன்னணி நடிகரான விஜய்யுடன் 3 திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி இருந்தார் அட்லி. தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகி இருந்த நிலையில், அனைத்து திரைப்படங்களுமே பிளாக்பாஸ்டர் திரைப்படமாகவும் மாறி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்னும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், பிரம்மாண்டமாகவும் ஜவான் திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், இதன் மூலம் முதல் முறையாக இயக்குனர் அட்லியுடன் அவர் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.  எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொள்கின்றனர்..

இது தொடர்பான அவர்களது செய்திக்குறிப்பில், “சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம்.. அன்புடன் அட்லீ & பிரியா அட்லீ” என குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | இந்திய டூரின் முக்கிய தருணங்கள்.. பாடகி பிரகதி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Atlee and priya announced they are expecting their first child

People looking for online information on Atlee, Atlee Priya, First child will find this news story useful.