''45 நாட்கள், 40 லொகேஷன்கள்...'' - பா.ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநராக அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி போன்ற தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படங்களை கொடுத்தவர் பா.ரஞ்சித். இவர் தயாரிப்பாளராக அறிமுகமான படம் பரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை கதிர், ஆனந்தி  நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமத்திருந்தார்.

இதனையடுத்து பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் 45 நாட்கள், 40 லொகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதுகுறித்து பேசிய இயக்குநர் அதியன் ஆதிரை,  “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Athiyan Athirai speaks about Pa.Ranjith's Irandam Ulaga Porin Kadaisi Gundu

People looking for online information on Dinesh, Irandam Ulagaporin Kadaisi Gundu, Pa Ranjith will find this news story useful.