"பேச விருப்பம் இல்லன்னா பேசாத".. அசல் கோலார் பேச்சால் கடுப்பான ADK?.. அப்ப சம்பவம் இருக்கு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | ஷிவினை பற்றிய ஹேஷ்டாக்ஸ்.. சொல்லியதும் வெட்கப்பட்ட விக்ரமன்.. !

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் Guest வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது இதே பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி வெளியேறி இருந்த போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர். அசல் கோலார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ஆறாவது பிக் பாஸ் சீசனில் களமிறங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் வெளியேறி இருந்த நிலையில், தற்போது இந்த டாஸ்க் நடுவே பிக் பாஸ் வீட்டில் வருகை தரவும் செய்துள்ளனர்.

தற்போது உள்ள போட்டியாளர்கள் ராபர்ட் மற்றும் அசல் கோலார் ஆகியோரை பார்த்ததும் உற்சாகம் அடைந்து அவர்களை வரவேற்கவும் செய்தனர். அப்போது அசல் கோலார் ADKவிடம், "வெளிய போய்ட்டு சில விஷயம் எல்லாம் பார்த்தேன். எனக்கு அது எல்லாம் புடிக்கல சுத்தமா" என கூறினார்.

இது தொடர்பாக இருவரும் சில கருத்துக்களைத் தெரிவிக்க, அசல் கோலார் அதை சொல்ல தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது. அப்போது பதில் சொல்லும் ஏடிகே, "பேச விருப்பம் இல்லன்னா பேசாத. பிரச்சனையே கிடையாது எனக்கு" என தெரிவிக்கிறார்.

Also Read | வாரிசு படம் பார்த்து விட்டு.. தளபதி 67 Update கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. Varisu!!

தொடர்புடைய இணைப்புகள்

Asal Kolaar and robert master entry in bigg boss house

People looking for online information on ADK, Asal kolaar, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Robert master, Vijay Television, Vijay tv will find this news story useful.