LATEST: அருண் விஜய் - ஹரி இணையும் புதிய படம்! பட ஹீரோவே அறிவித்த முக்கியமான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது மாமாவான இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும். இந்த படத்திற்கு யானை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்த யானை படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். முதலில் சமுத்திரக்கனி நடிக்கும் பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்தது. பிரகாஷ் ராஜ் நடிக்க முடியாத சூழலில் சமுத்திரக்கனி நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், காரைக்குடி, பழனி, சென்னை பகுதிகளில் நடந்தது. தற்போது  இப்படத்தின்  மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருவதாக நடிகர் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் பகுதிகளில் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay yaanai movie latest update on shooting

People looking for online information on Arunvijay, Hari, Priyabhavani Shankar will find this news story useful.