அட.. ARR பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியத்தை வரைஞ்சது இவரா? – ஆச்சரிய தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் ரஹ்மான் பகிர்ந்திருந்த ‘தமிழணங்கு’ ஓவியம் வைரலாகவே அதுபற்றி பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தன.

Advertising
>
Advertising

BBUltimate வின்னரை சந்தித்த ஜுலி …. ஜூலிக்கு ஐ லவ் யூ சொன்ன BB பிரபலம் – வைரல் reunion pics!

ரஹ்மான் பகிர்ந்த ஓவியம்…

சமீபத்தில் ஓவியர் ’சந்தோஷ் நாராயணன்’ வரைந்த, பாரதி தாசனின் "இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்" எனும் வரிகள் பதித்த ழகரம் ஏந்திய தமிழணங்கு எனும் ஒரு ஓவியத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து பலரும் அந்த ஓவியத்தைப் பகிர அது இணையத்தில் வைரலானது. மேலும் அந்த ஓவியத்தில் தமிழன்னையை கருப்பாக அகோரமாக வரைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கு பதிலாக ‘ஏன் கருப்பாக வரையக்கூடாது’ என்ற கேள்வியும் பலரால் எழுப்பப் பட்டுள்ளது.

யார் இந்த சந்தோஷ் நாராயணன்…

ஓவியராக மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற புத்தக அட்டை வடிவமைப்பாளராகவும் திகழ்பவர் சந்தோஷ் நாராயணன். தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்கள் பலவற்றுக்கு அட்டைகளை சிறப்பாக வடிவமைத்து பாராட்டுகளைப் பெற்றவர். மினிமலிச பாணி எனும் வகைமாதிரியில் உருவாக்கப்படும் அவரின் அட்டைகள் காண்போரை கவரும் விதமாக எளிமையாக உருவாக்கப்பட்டு இருக்கும்.  சச்சினை இவர் வரைந்த வித்தியாசமான ஓவியர் அவர் பார்வைக்கு சென்று அவரிடம் பாராட்டுகளையும் பெற்றது.

இவர் எழுதிய அஞ்ஞான சிறுகதைகள் புத்தகம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவை மட்டுமில்லாமல் தனது குழந்தைகளோடு சேர்ந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் மினிமலிச பாணியில் வீட்டுக்குள் வைத்தே சில குறும்படங்களை இயக்கியவர். தொடர்ந்து இவர் பகிரும் ஓவியங்கள் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்று வருகின்றன.

ரைட்டர் படத்தில்…

எழுத்து, ஓவியம் மட்டுமில்லாமல் தற்போது சினிமாவிலும் இவர் எழுத்தாளராக கால்பதித்துள்ளார். சமீபத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ரைட்டர்’ படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியவர். அடுத்து இப்போது பிராங்க்ளின் இயக்கும் படத்திலும் எழுத்தாளராக பணியாற்ற உள்ளார்.

பா ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் நட்பு…

இயக்குனர் பா ரஞ்சித்தும் சந்தோஷ் நாராயணனும் சென்னையில் கவின்கலை கல்லூரியில் படித்தவர்கள். ரஞ்சித்துக்கு சீனியரான இவரைப் பற்றி பா ரஞ்சித்   ”கலைப் பற்றிய தன்னுடைய பார்வை செழுமையாக்கியதில் சந்தோஷ் நாராயணன் அண்ணனுக்கு பங்குண்டு” என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா, எழுத்து, ஓவியம், குறும்பட இயக்கம் என பலதுறைகளில் கலக்கி வரும் கலைஞராக சந்தோஷ் நாராயணன் திகழ்ந்து வருகிறார்.

”ஒரு மனிதனின் வாழ்க்கையில்….” – புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ந்த நடிகர் சூரி

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman shared Thamizhangu pic artist santhosh narayanan

People looking for online information on AR Rahman, Artist santhosh nayaraynan, சந்தோஷ் நாராயணன், தமிழணங்கு, தமிழணங்கு ஓவியம், ரஹ்மான், Santhosh nayaraynan, Thamizhanangu will find this news story useful.