KANTARA: 'காந்தாரா' பார்த்து படக்குழுவை பாராட்டி தள்ளிய அனுஷ்கா.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காந்தாரா படம் பார்த்த பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | BIGGBOSS போறதுக்கு முன்னாடி மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

காந்தாராவில் பொல்லாதவன் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகை அனுஷ்கா படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், "காந்தாரா படத்தை பார்த்துவிட்டேன்.. படத்தை முழு முழுவதும் ரசித்தேன்!!  படக்குழுவினர் அனைவருக்கும்  வாழ்த்துகள். அற்புதமான படத்தை கொடுத்துள்ளீர்கள். அனைத்து அனுபவங்களுக்கும் நன்றி. ரசிகர்கள் படத்தை காணத்தவறாதீர்கள்" என அனுஷ்கா ஷெட்டி ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | ஆரம்பம் பட ஸ்டைலில் அஜித்.. விமான நிலையத்தில் கூடிய நூற்றுக்கணக்கான ரசிகர்கள்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anushka Shetty Watched and Tweet about Kantara Movie

People looking for online information on Anushka Shetty, Anushka Shetty tweet about Kantara Movie, Kantara will find this news story useful.