சனமிற்கு 'மெசேஜ்' அனுப்பிய அனிதா... தனிமையில் அழுத ஷிவானி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் வெளியேறினார். ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவருக்கும் இது மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. எனினும் சனம் இதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து இந்தியளவில் சனம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனார். சனம் இல்லையெனில் இனி பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் உள்ள சக போட்டியாளர்களுக்கும் இந்த முடிவு அதிர்ச்சியை அளித்தது போல. ரம்யா எப்படி ஆரிக்கு அடுத்து காப்பாற்றப்பட்டாங்க என கேப்ரியலா கேள்வி எழுப்ப, நிஷா சனம் வெளிய போறது அதிர்ச்சியா இருக்கு என்றார். இதற்கு நீங்கள் தகுதி அற்றவர் சனம் என ஆரி, கமல் முன்னிலையில் குரல் கொடுத்தார். பிக்பாஸ் ஆல் தி பெஸ்ட் சொல்லி வழி அனுப்பினார். அனிதாவால் பேசவே முடியவில்லை. தான் இதற்கு காரணமாகி விட்டோமோ? என்ற குற்ற உணர்ச்சியில் அழுது கொண்டே இருந்தார்.

நேற்றும் அது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வழக்கமாக டான்ஸ் ஆடும் அனிதா பெட்டைவிட்டு எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து Sorry என ஒரு பேப்பரில் எழுதி Anitha என கையெழுத்து போட்டு அதை ஒரு கவரில் வைத்து சனமின் பொருட்களுடன் கொண்டு வைத்தார். இதேபோல தனிமையில் ஷிவானியும் அழுதது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களின் அன்பையும் சனம் சம்பாதித்து விட்டார்!

தொடர்புடைய இணைப்புகள்

Anitha wrote a letter to Sanam Shetty,Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.